என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இங்கிலாந்து தொடரை டிரா செய்தாலே, பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய வெற்றி: அப்ரிடி சொல்கிறார்
Byமாலை மலர்4 Aug 2020 10:15 AM GMT (Updated: 4 Aug 2020 10:15 AM GMT)
மூன்று போட்டிகள் கொண்ட இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை டிரா செய்தாலே பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய வெற்றி என்று ஷாஹித் அப்ரிடி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தலா மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது.
டெஸ்ட் தொடர் மான்செஸ்டரில் நாளை தொடங்குகிறது. இதற்கு முன் இரண்டு முறை பாகிஸ்தான் இங்கிலாந்து சென்றிருந்தபோது இரண்டு முறையும் தொடரையும் டிரா செய்திருந்தது.
இந்நிலையில் இந்தத் தொடரையும் டிரா செய்தாலே பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய வெற்றி என்று ஷாஹித் அப்ரிடி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஷாஹித் அப்ரிடி கூறுகையில் ‘‘டெஸ்ட் போட்டி என்று வரும்போது இங்கிலாந்து சூழ்நிலை மிகவும் கடினமானது. பாகிஸ்தான் அணி டிரா செய்தாலே அது மிகப்பெரிய என்று நான் நினைக்கிறேன். டிரா வெற்றிக்கு சமமானது. தற்போதுள்ள அணி நிர்வாகம் அணிக்கு மிகப்பெரிய பலம். செசனுக்கு செசன் வீரர்களுக்கு அறிவுரை வழங்குவார்கள் என்ற உறுதி எனக்குள்ளது’’ என்றார்.
மிஸ்பா-உல்-ஹக் (தலைமை பயிற்சியாளர்) மற்றும் யூனிஸ் கான் (பேட்டிங் பயிற்சியாளர்), வக்கார் யூனிஸ் (பந்து வீச்சு பயிற்சியாளர்), முஷ்டாக் அகமது ஆகியோர் அணியுடன் உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X