என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா எதிரொலி- டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி ரத்து?
Byமாலை மலர்1 Aug 2020 3:18 AM GMT (Updated: 1 Aug 2020 3:18 AM GMT)
இந்த ஆண்டுக்கான டிஎன்பிஎல் போட்டியை ரத்து செய்வது குறித்து இன்னும் ஓரிரு வாரங்களில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை:
5-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த ஜூன் 10-ந் தேதி முதல் ஜூலை 12-ந் தேதி வரை சேலம், கோவை, நத்தம், நெல்லை ஆகிய இடங்களில் நடக்க இருந்தது. கொரோனா அச்சத்தால் இந்த போட்டி மறுதேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்படுவதாக கடந்த மே மாதம் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்தது. தள்ளிவைக்கப்பட்ட டி.என்.பி.எல். போட்டியை ஆகஸ்டு, செப்டம்பர் மாதத்தில் நடத்தலாம் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ஆலோசித்து வந்தது. ஆனால் தமிழ்நாட்டில் கொரோனா பரவல் தற்போது அதிகமாக இருப்பதால் இந்த மாதத்தில் போட்டியை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் எதுவுமில்லை.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19-ந்தேதி முதல் நவம்பர் 8-ந்தேதி வரை நடக்க இருக்கிறது. இதில் தமிழகத்தை சேர்ந்த முன்னணி வீரர்களான ஆர்.அஸ்வின் (டெல்லி கேப்பிட்டல்ஸ்), எம்.விஜய் (சென்னை சூப்பர் கிங்ஸ்), தினேஷ் கார்த்திக் (கொல்கத்தா), விஜய் சங்கர் (ஐதராபாத்), வாஷிங்டன் சுந்தர் (பெங்களூரு) ஆகியோர் விளையாட உள்ளனர். இதனால் அந்த நேரத்தில் டி.என்.பி.எல். போட்டியை நடத்துவது பொருத்தமாக இருக்காது.
ஐ.பி.எல். முடிந்ததும், உள்ளூர் ஆட்டமான ரஞ்சி கிரிக்கெட் தொடங்குகிறது. எனவே டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியை நடத்துவதற்கு உகந்த காலம் கிடைப்பது மிகவும் கடினமாகும். இதனால் இந்த ஆண்டுக்கான டி.என்.பி.எல். போட்டியை ரத்து செய்வது குறித்து இன்னும் ஓரிரு வாரங்களில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
5-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த ஜூன் 10-ந் தேதி முதல் ஜூலை 12-ந் தேதி வரை சேலம், கோவை, நத்தம், நெல்லை ஆகிய இடங்களில் நடக்க இருந்தது. கொரோனா அச்சத்தால் இந்த போட்டி மறுதேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்படுவதாக கடந்த மே மாதம் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்தது. தள்ளிவைக்கப்பட்ட டி.என்.பி.எல். போட்டியை ஆகஸ்டு, செப்டம்பர் மாதத்தில் நடத்தலாம் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ஆலோசித்து வந்தது. ஆனால் தமிழ்நாட்டில் கொரோனா பரவல் தற்போது அதிகமாக இருப்பதால் இந்த மாதத்தில் போட்டியை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் எதுவுமில்லை.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19-ந்தேதி முதல் நவம்பர் 8-ந்தேதி வரை நடக்க இருக்கிறது. இதில் தமிழகத்தை சேர்ந்த முன்னணி வீரர்களான ஆர்.அஸ்வின் (டெல்லி கேப்பிட்டல்ஸ்), எம்.விஜய் (சென்னை சூப்பர் கிங்ஸ்), தினேஷ் கார்த்திக் (கொல்கத்தா), விஜய் சங்கர் (ஐதராபாத்), வாஷிங்டன் சுந்தர் (பெங்களூரு) ஆகியோர் விளையாட உள்ளனர். இதனால் அந்த நேரத்தில் டி.என்.பி.எல். போட்டியை நடத்துவது பொருத்தமாக இருக்காது.
ஐ.பி.எல். முடிந்ததும், உள்ளூர் ஆட்டமான ரஞ்சி கிரிக்கெட் தொடங்குகிறது. எனவே டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியை நடத்துவதற்கு உகந்த காலம் கிடைப்பது மிகவும் கடினமாகும். இதனால் இந்த ஆண்டுக்கான டி.என்.பி.எல். போட்டியை ரத்து செய்வது குறித்து இன்னும் ஓரிரு வாரங்களில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X