என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சவுராஷ்டிர வீரர் ஷெல்டன் ஜாக்சன் புதுச்சேரி அணிக்காக விளையாடுகிறார்
Byமாலை மலர்12 July 2020 10:45 AM GMT (Updated: 12 July 2020 10:45 AM GMT)
ரஞ்சி கோப்பையை சவுராஷ்டிர கிரிக்கெட் அணி கைப்பற்ற முக்கிய காரணமாக இருந்த ஷெல்டன் ஜாக்சன் புதுச்சேரி அணிக்காக விளையாட இருக்கிறார்.
சவுராஷ்டிரா ரஞ்சி கோப்பை கிரிக்கெட் அணிக்காக விளையாடி வந்தவர் ஷெல்டன் ஜாக்சன். 2019-2020 ரஞ்சி கோப்பையை சவுராஷ்டிரா அணி முதன்முறையாக கைப்பற்றியது. இதற்கு ஜாக்சனின் சிறப்பான பேட்டிங் முக்கிய காரணமாக இருந்தது. அவர் 10 ஆட்டங்களில் 809 ரன்கள் குவித்தார். சராசரி 50.56 ஆகும்.
தற்போது அவர் சவுராஷ்டிர கிரிக்கெட் அணி இருந்து விலகி புதுச்சேரி அணியில் விளையாட முடிவு செய்துள்ளார். இதுகுறித்து ஷெல்டன் ஜாக்சன் கூறுகையில் ‘‘இது மிகவும் கடினமான முடிவு. இது எளிதான அல்ல, என்றாலும் தொழில்முறை கிரிக்கெட்டில் மற்றொரு அணி அல்லது மாநிலத்திற்காக விளையாட இது சரியான நேரம் என்று உணர்கிறேன்’’ என்றார்.
ஏற்கனவே, பங்கங் சிங், பராஸ் டொக்ரா ஆகிய இரண்டு வீரர்களும் புதுச்சேரி அணிக்கு மாறியுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X