search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரோகித் - ரகானே
    X
    ரோகித் - ரகானே

    மீண்டும் களத்தில் இறங்க காத்திருக்கிறோம் - ரோகித், ரகானே சொல்கிறார்கள்

    சர்வதேச கிரிக்கெட் போட்டியில் மீண்டும் விளையாட காத்திருக்கிறோம் என இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ரோகித் சர்மா, ரகானே தெரிவித்துள்ளனர்.

    சர்வதேச கிரிக்கெட் போட்டி மார்ச் மாதம் 13-ந்தேதியில் இருந்து கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலால் நடைபெறவில்லை. அதன்பின் 117 நாட்களுக்குப் பின் நேற்று இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சவுத்தாம்ப்டனில் நடைபெற்றது. கொரோனாவின் வீரியம் இன்னும் கட்டுக்குள் வராத நிலையிலும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் துணிச்சலுடன் இந்த போட்டிக்காளை ஏற்பாடு செய்துள்ளது. அதனால் இந்த தொடர் உலகம் முழுவதும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

    நீண்டநாள் கழித்து சர்வதேச கிரிக்கெட் நடவடிக்கைக்கு திரும்பிய நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் ரகானே ஆகியோர் மீண்டும் கிரிக்கெட் களத்தில் இறங்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து ரகானே கூறியதாவது:- மீண்டும் கிரிக்கெட் விளையாடுவதை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இரு அணிகளுக்கும் நல்வாழ்த்துக்கள் எனவும் மீண்டும் களத்தில் இறங்க காத்திருக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

    ரோகித் சர்மா கூறியதாவது:- கிரிக்கெட் மீண்டும் இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் நேர்மறையான காட்சிகள். இறுதியாக கிரிக்கெட் விளையாடுவதைப் பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இரு அணிகளுக்கும் சிறந்த வாழ்த்துக்கள் என ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். 
    Next Story
    ×