search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முகமது ஹபீஸ்
    X
    முகமது ஹபீஸ்

    முகமது ஹபீஸ் எங்களுக்கு பிரச்சினையை ஏற்படுத்திவிட்டார்: பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு

    தனியார் மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டு பிரச்சினையை ஏற்படுத்திவிட்டார் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.
    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் மற்றும் 20 ஓவர் தொடரில் ஆடுவதற்காக வருகிற 28-ந்தேதி இங்கிலாந்துக்கு புறப்பட்டு செல்கிறது. இதையொட்டி பாகிஸ்தான் அணிக்கு தேர்வு செய்யப்பட்ட வீரர்களுக்கு அவரவர் இருப்பிடங்களுக்கே சென்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சார்பில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

    இதில் ஆல்-ரவுண்டர் முகமது ஹபீஸ், வேகப்பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸ், முன்னணி பேட்ஸ்மேன் பஹார் ஜமான் உள்பட 10 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் ஆல்-ரவுண்டரான 39 வயதான முகமது ஹபீஸ் தனது திருப்திக்காக லாகூரில் உள்ள மற்றொரு தனியார் ஆஸ்பத்திரியில் அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். இதில் ஹபீசுக்கு கொரோனா தொற்று இல்லை என்பதை குறிக்கும் வகையில் ‘நெகட்டிவ்’முடிவு வந்துள்ளது.

    இதேபோல் அவரது குடும்பத்தினர் யாருக்கும் பாதிப்பு இல்லை. இந்த தகவலை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சார்பில் நடத்தப்பட்ட பரிசோதனை சரியானது தானா? என்ற குழப்பம் மற்ற வீரர்களுக்கு ஏற்பட்டு உள்ளது.

    இந்நிலையில் ஹபீஸ் எங்களுக்கு பிரச்சினையை ஏற்படுத்திவிட்டார் என்று பாகிஸ்தான் சிஇஓ வாசிம் கான் கவலையை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பாகிஸ்தான் சிஇஓ வாசிம் கான் கூறுகையில் ‘‘நான் ஹபீஸ் உடன் பேசினேன். அப்போது இந்த பிரச்சினையை அவர் கையாண்ட விதத்தில் நாங்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தோம் என்பதை அவரிடம் தெளிவாக கூறிவிட்டோம்.

    தனி நபராக தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்ய உரிமை உள்ளது. ஆனால் அவர் அதற்கு முன் எங்களிடம் பேசியிருக்க வேண்டும். ஏனென்றால் அவர் எங்களுக்க பிரச்சினையை ஏற்படுத்திவிட்டார். மீடியாக்களுக்கு தகவல் தெரிவிப்பதில் ஹபீஸ் விதிமுறையை மீறுவது இது முதல் தடவை அல்ல.

    அவர் மத்திய ஒப்பந்தத்தில் இல்லை. என்றாலும் ஒருமுறை பாகிஸ்தான் அணிக்கு தேர்வான பின்னர், அனைத்து வீரர்களுக்கான விதிமுறையை கடைபிடிக்க வேண்டும். இது பிரச்சினையை ஏற்படுத்தும் என்பதால், நான் இந்த இன்னும் கவனமாக பார்த்துக் கொண்டு வருகிறோம்’’ என்றார்.
    Next Story
    ×