என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் போர்டில் 7 பேருக்கு கொரோனா
Byமாலை மலர்23 Jun 2020 10:21 AM GMT (Updated: 23 Jun 2020 10:21 AM GMT)
அதிகாரிகள் மற்றும் வீரர்கள் என கொரோனா பரிசோதனை செய்ததில் 7 பேருக்கு பாசிட்டிவ் ரிசல்ட் வந்துள்ளதாக தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. சாதராண நபரில் இருந்து நாட்டின் முக்கிய பொறுப்பில் இருக்கும் அரசியல்வாதி என பாகுபாடு இன்றி தாக்கி வருகிறது. தற்போது விளையாட்டு வீரர்களையும் கொரோனா விட்டு வைக்கவில்லை. டென்னிஸ் வீரர்கள், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள், வங்காளதேச கிரிக்கெட் வீரர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நாட்டில் உள்ள அனைத்து கிரிக்கெட் அமைப்புகளில் உள்ள அதிகாரிகள், ஒப்பந்த வீரர்கள் என 100-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை செய்ய தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் போர்டு ஏற்பாடு செய்தது. இதில் ஏழு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் பெயர்களை வெளியிட மறுத்துவிட்டது.
இந்த மாதம் இறுதியில் 3டிசி கிரிக்கெட் தொடர் நடைபெற இருந்தது. ஆனால் அரசு அனுமதி அளிக்காததால் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
‘‘எங்களது மருத்துவ நெறிமுறையின்படி பாதிக்கப்பட்டவர்களின் பெயர்களை வெளியிட அனுமதி கிடையாது’’ என்று தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் போர்டின் சிஇஓ ஜேக்யூஸ் ஃபால் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X