search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எம்எஸ் டோனி, கவுதம் கம்பிர்
    X
    எம்எஸ் டோனி, கவுதம் கம்பிர்

    எம்எஸ் டோனி இந்த இடத்தில் களம் இறங்கியிருந்தால் ஏராளமான சாதனைகளை உடைத்திருப்பார்: கம்பிர்

    எம்எஸ் டோனி 3-வது இடத்தில் களம் இறங்கி இருந்தால் இன்னும் ஏராளமான சாதனைகளை முறியடித்திருப்பார் என்று கவுதம் காம்பிர் தெரிவித்துள்ளார்.
    ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியின் கிரிக்கெட் கனெக்டட் நிகழ்ச்சியில் பேசிய கவுதம் காம்பீர் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார். ‘‘இந்த கிரிக்கெட் உலகம் ஒன்றைத் தவறவிட்டுவிட்டது. அது எம்எஸ் டோனி இந்தியாவுக்காக மூன்றாவது பேட்ஸ்மேனாக களமிறங்காதது. அவர் கேப்டனாக இல்லாமல் போயிருந்தால், மூன்றாவது ஆட்டக்காரராகக் களமிறங்கியிருந்தால், கிரிக்கெட் உலகம் வேறு ஒரு எம்எஸ் டோனியை ரசித்திருக்கும். ஒரு முற்றிலும் மாறுபட்ட எம்எஸ் டோனியை நாம் கண்டு இருக்கலாம்.

    அப்படி அவர் களமிறங்கியிருந்தால் இன்னும் ஏராளமான ரன்களை குவித்திருப்பார், பல சாதனைகளை உடைத்திருப்பார். சாதனைகளை விடுங்கள் சாதனைகள் படைக்கப்படுவதே உடைப்பதற்காக தானே. அதைவிட ஒரு மிக நல்ல பேட்ஸ்மேனை கிரிக்கெட் உலகம் ரசித்திருக்கும். அது அவர் கேப்டனாக இல்லாமல் போயிருந்தாலும் சாத்தியப்பட்டிருக்கும்

    எம்எஸ் டோனி, கவுதம் கம்பிர்

    ஒரு பிளாட் பிட்சில் மூன்றாவது பேட்ஸ்மேனாக எம்எஸ் டோனி களமிறங்கியிருந்தால், இப்போதுள்ள பவுலர்களை மனதில் வைத்துப் பார்த்தால் வேறு மாதிரியான சாதனைகளைப் படைத்திருப்பார். உதாரணத்துக்கு இலங்கை, வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ் பவுலிங்கை நினைத்துப் பாருங்கள்’’ என்றார்.

    2004-ம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகம் ஆன எம்எஸ் டோனி 3-வது இடத்தில் களம் இறங்கி இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு எதிராக மறக்க முடியாத இன்னிங்ஸ் விளையாடினார். 3-வது இடத்தில் எம்எஸ் டோனி 82 சராசரி வைத்துள்ளார்.
    Next Story
    ×