என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜெர்மனியில் 3 மாதங்களாக தவித்த விஸ்வநாதன் ஆனந்த் இன்று இந்தியா திரும்புகிறார்
Byமாலை மலர்30 May 2020 11:13 AM GMT (Updated: 30 May 2020 11:13 AM GMT)
ஜெர்மனியில் 3 மாதங்களாக தவித்த உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் இன்று நாடு திரும்புகிறார்.
சென்னை:
5 முறை உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றவர் விஸ்வநாதன் ஆனந்த். சென்னையைச் சேர்ந்த இவர் பிப்ரவரி மாதம் ஜெர்மனியில் நடந்த செஸ் போட்டியில் பங்கேற்றார்.
கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. விமான சேவை ரத்து செய்யப்பட்டதால், ஆனந்த் சென்னை திரும்ப முடியாமல் தவித்தார்.
ஜெர்மனியில் அவர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார். ஜெர்மனியில் சிக்கி தவித்த அவர் நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தார்.
அங்குள்ள இந்திய தூதரகத்திடம் முறையிட்டார். வெளிநாட்டில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள் மீட்கப்பட்டு சிறப்பு விமானம் மூலம் நாடு திரும்புகிறார்கள். இதேபோல ஜெர்மனியிலிருந்து விஸ்வநாதன் ஆனந்தும், நாடு திரும்புவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு விட்டது.
இந்த நிலையில் ஜெர்மனியில் சிக்கி தவித்த விஸ்வநாதன் ஆனந்த் இன்று நாடு திரும்புகிறார். அங்குள்ள பிராங்போர்ட்டிலிருந்து விமானம் ஒன்று டெல்லி மற்றும் பெங்களூருக்கு வந்தடைகிறது. அந்த விமானத்தில் ஆனந்த் வருகிறார். இந்த விமானம் இன்று பிற்பகலில் பெங்களூருக்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கிறது.
பெங்களூருக்கு வரும் ஆனந்த் அரசின் வழிகாட்டுதல் படி 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார். தனிமைக் காலம் முடிந்தபிறகே ஆனந்த் அங்கிருந்து சென்னை திரும்புவார்.
5 முறை உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றவர் விஸ்வநாதன் ஆனந்த். சென்னையைச் சேர்ந்த இவர் பிப்ரவரி மாதம் ஜெர்மனியில் நடந்த செஸ் போட்டியில் பங்கேற்றார்.
கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. விமான சேவை ரத்து செய்யப்பட்டதால், ஆனந்த் சென்னை திரும்ப முடியாமல் தவித்தார்.
ஜெர்மனியில் அவர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார். ஜெர்மனியில் சிக்கி தவித்த அவர் நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தார்.
அங்குள்ள இந்திய தூதரகத்திடம் முறையிட்டார். வெளிநாட்டில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள் மீட்கப்பட்டு சிறப்பு விமானம் மூலம் நாடு திரும்புகிறார்கள். இதேபோல ஜெர்மனியிலிருந்து விஸ்வநாதன் ஆனந்தும், நாடு திரும்புவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு விட்டது.
இந்த நிலையில் ஜெர்மனியில் சிக்கி தவித்த விஸ்வநாதன் ஆனந்த் இன்று நாடு திரும்புகிறார். அங்குள்ள பிராங்போர்ட்டிலிருந்து விமானம் ஒன்று டெல்லி மற்றும் பெங்களூருக்கு வந்தடைகிறது. அந்த விமானத்தில் ஆனந்த் வருகிறார். இந்த விமானம் இன்று பிற்பகலில் பெங்களூருக்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கிறது.
பெங்களூருக்கு வரும் ஆனந்த் அரசின் வழிகாட்டுதல் படி 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார். தனிமைக் காலம் முடிந்தபிறகே ஆனந்த் அங்கிருந்து சென்னை திரும்புவார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X