என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஐபிஎல் போட்டியால் தான் இங்கிலாந்து கிரிக்கெட் வளர்ந்துள்ளது - பட்லர்
Byமாலை மலர்24 May 2020 9:43 AM GMT (Updated: 24 May 2020 9:47 AM GMT)
இங்கிலாந்து கிரிக்கெட் ஐ.பி.எல். போட்டியால் தான் வளர்ந்துள்ளது என அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் கூறியுள்ளார்.
லண்டன்:
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவர் ஜோஸ் பட்லர். இவர் ஐ.பி.எல். போட்டியில் முதலில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார். தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக கடந்த 2 ஆண்டாக ஆடி வருகிறார்.
இந்த நிலையில் உலக கோப்பைக்கு பிறகு ஐ.பி.எல் போட்டியே சிறந்தது என்று பட்லர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது;-
இங்கிலாந்து கிரிக்கெட் ஐ.பி.எல். போட்டியால் தான் வளர்ந்துள்ளது. இதில் எந்த சந்தேகமும் இல்லை. இதில் விளையாடியே தீர வேண்டும் என்பதே என் ஆசை. உலகக்கோப்பைக்கு பிறகு ஐ.பி.எல் .கிரிக்கெட் தான் சிறந்த போட்டியாகும். ஐ.பி.எல். தொடரில் சில சவால்கள் மிகப்பிரமாதமானவை, கோலி, டிவில்லியர்ஸ், கெய்ல் ஆகியோர் ஸ்டெய்ன், பும்ரா, மலிங்காவை எதிர்கொள்வது சுவாரசியம். கோலி, டிவில்லியர்ஸ் சேர்ந்து ஆடுவதைப் பார்ப்பது வித்தியாசமானது.
கெவின் பீட்டர்சன் உண்மையில் நாங்கள் எல்லாம் ஐ.பி.எல். ஆடுவதற்கு பாலம் அமைத்துக் கொடுத்தவர். வளரும் கிரிக்கெட் வீரர்களுக்கு ஐ.பி.எல். எவ்வளவு முக்கியம் என்பதை பீட்டர்சன் உணர்ந்திருக்கிறார்.
இவ்வாறு ஜோஸ் பட்லர் கூறியுள்ளார்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவர் ஜோஸ் பட்லர். இவர் ஐ.பி.எல். போட்டியில் முதலில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார். தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக கடந்த 2 ஆண்டாக ஆடி வருகிறார்.
இந்த நிலையில் உலக கோப்பைக்கு பிறகு ஐ.பி.எல் போட்டியே சிறந்தது என்று பட்லர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது;-
இங்கிலாந்து கிரிக்கெட் ஐ.பி.எல். போட்டியால் தான் வளர்ந்துள்ளது. இதில் எந்த சந்தேகமும் இல்லை. இதில் விளையாடியே தீர வேண்டும் என்பதே என் ஆசை. உலகக்கோப்பைக்கு பிறகு ஐ.பி.எல் .கிரிக்கெட் தான் சிறந்த போட்டியாகும். ஐ.பி.எல். தொடரில் சில சவால்கள் மிகப்பிரமாதமானவை, கோலி, டிவில்லியர்ஸ், கெய்ல் ஆகியோர் ஸ்டெய்ன், பும்ரா, மலிங்காவை எதிர்கொள்வது சுவாரசியம். கோலி, டிவில்லியர்ஸ் சேர்ந்து ஆடுவதைப் பார்ப்பது வித்தியாசமானது.
கெவின் பீட்டர்சன் உண்மையில் நாங்கள் எல்லாம் ஐ.பி.எல். ஆடுவதற்கு பாலம் அமைத்துக் கொடுத்தவர். வளரும் கிரிக்கெட் வீரர்களுக்கு ஐ.பி.எல். எவ்வளவு முக்கியம் என்பதை பீட்டர்சன் உணர்ந்திருக்கிறார்.
இவ்வாறு ஜோஸ் பட்லர் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X