என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விராட் கோலி வெற்றிபெற அதிர்ஷ்டம், எம்எஸ் டோனியின் ஆதரவு முக்கிய காரணம்: பாக். வீரர் சொல்கிறார்
Byமாலை மலர்19 May 2020 10:21 AM GMT (Updated: 19 May 2020 10:21 AM GMT)
பாகிஸ்தான் அணியின் விராட் கோலி என்று கருதப்பட்ட நான், தற்போது சாதிக்க முடியாமல் தோல்வியடைந்து விட்டேன் என்று அகமது ஷேசாத் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் தலைசிறந்த வீரராக இருக்கும் விராட் கோலியுடன் ஒப்பிட்டு பேசப்பட்டவர்களில் பாகிஸ்தான் அணியின் அகமது ஷேசாத்தும் ஒருவர். அறிமுகமான காலத்தில் அவரது பேட்டிங் திறமை அப்படி பேசவைத்தது. ஆனால் காலம் செல்லசெல்ல விராட் கோலி தலைசிறந்த வீரராக மாறிவிட்டார். 28 வயதாகும் அகமது ஷேசாத்தின் கிரிக்கெட் வாழ்க்கை சரிவை சந்தித்தது.
இதற்கு அணி நிர்வாகத்திடம் இருந்து போதுமான ஆதரவு கிடைக்காததுதான் முக்கிய காரணம் என்று அகமது ஷேசாத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அகமது ஷேசாத் கூறுகையில் ‘‘சிறந்த வீரருடன் ஒப்பிட்டு பார்க்கும்போது நெருக்கடியை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. அவர்களுடைய பின்னணி தெரியாமல் நாம் இருவரை ஒப்பிட முனைகிறோம்.
எந்வொரு வீரரும் வெற்றிபெற அவர்களுக்கு பயிற்சியாளர், கேப்டன், கிரிக்கெட் போர்டு ஆகியவற்றின் ஆதரவு தேவைப்படுகிறது. ஒரு வீரரோ, வீராங்கனையோ நம்பிக்கை பெற இது அவசியம்.
விராட் கோலி, ரோகித் சர்மா, ஜோ ரூட், கேன் வில்லியம்சன், பாபர் அசாம் ஆகியோரின் பின்னணியை பார்த்தால் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். ஏராளமான தொடர்களை இழந்திருப்பேன். ஆனால், எம்எஸ் டோனி எனக்கு ஆதரவாக இருந்தேன் என்று விராட் கோலியை சொல்லியிருக்கிறார். ரோகித் சர்மாவுக்கும் இது நிலைதான். இருவர் மீதும் எம்எஸ் டோனி நம்பிக்கை வைத்திருந்தார்’’என்றார்.
கடந்த 7 வருடத்ததிற்கு முன் பாகிஸ்தான் அணியில் அறிமுகமான அகமது ஷேசாத், 13 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். 2017-க்குப் பிறகு அணியில் இடம் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X