search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சோயிப் அக்தர்
    X
    சோயிப் அக்தர்

    ரசிகர்கள் இன்றி கிரிக்கெட் என்பது மணமகள் இல்லாத திருமணம் போன்றது: சோயிப் அக்தர்

    ரசிகர்கள் இன்றி வெறிச்சோடிய மைதானத்தில் விளையாடுவது மணமகள் இல்லாத திருமணம் போன்றது என்று சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.
    கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தில் இருந்து மெல்ல மெல்ல சகஜ நிலைக்கு திரும்பி வரும் நாடுகளில் விளையாட்டு போட்டிகள் ரசிகர்கள் இல்லாத வெறிச்சோடிய மைதானங்களில் நடைபெற்று வருகின்றன.

    தற்போது வரைக்கும் தென்கொரியா, ஜெர்மனி நாடுகள் கால்பந்து போட்டிகளை தொடங்கிவிட்டன. இத்தாலி, ஸ்பெயின் நாடுகளில் தயாராகி வருகின்றன.

    கிரிக்கெட் போட்டிகளும் ரசிகர்கள் இன்றிதான் நடைபெற வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இந்திய அரசு ரசிகர்கள் இன்று மைதானங்களை திறக்கலாம் என்று தெரிவித்துள்ளது. பெரும்பாலானோர் இதற்கு ஆதரவு தெரிவித்தாலும், விராட் கோலி போன்ற சில வீரர்கள் சில விஷயங்கள் மிஸ் ஆகும் என்று தெரிவிக்கின்றனர்.

    இந்நிலையில் ரசிகர்கள் இன்றி கிரிக்கெட் போட்டி என்பது மணமகள் இல்லாத திருமணம் போன்றது என்று சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சோயிப் அக்தர் கூறுகையில் ‘‘ரசிகர்கள் இன்றி போட்டிகளை நடத்துவது கிரிக்கெட் போர்டுகளுக்கு சாத்தியமானதாகவும், பாதுகாப்பானதாகவும் இருக்கலாம். ஆனால் மார்க்கெட் செய்ய முடியும் என்று நான் நினைக்கவில்லை. ரசிகர்கள் இன்றி கிரிக்கெட் என்பது மணமகள் இல்லாத திருமணம் போன்றது. போட்டிகளில் விளையாடுவதற்கு ரசிகர்கள் கூட்டம் தேவை. இன்னும் ஒரு வருடத்திற்குள் கொரோனா வைரஸ் சூழ்நிலை சரியாகிவிடும் என்று நம்புகிறேன்’’ என்றார்.
    Next Story
    ×