search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி
    X
    இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி

    பைலேட்டரல், ஐபிஎல் தொடருடன்தான் மீண்டும் கிரிக்கெட் தொடங்க வேண்டும்: ரவி சாஸ்திரி

    இருநாடுகளுக்கு இடையிலான தொடர், ஐபிஎல் லீக்குடன்தான் மீண்டும் கிரிக்கெட் தொடங்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணி தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் 10-ந்தேதிக்குப்பிறகு அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளும் நடைபெறவில்லை. தற்போது ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்துள்ளது. இந்தியாவில் சில மாநிலங்களின் முக்கிய நகரங்களில் மட்டுமே தாக்கம் அதிகமாக உள்ளது.

    ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகள் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டன. அடுத்த வாரத்தில் இருந்து இங்கிலாந்து வீரர்கள் பயிற்சியில் ஈடுபட இருக்கிறார்கள்.

    இதனால் மிக விரைவில் மீண்டும் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. இந்நிலையில் அப்படி கிரிக்கெட் போட்டி தொடங்கும் வாய்ப்பு வந்தால் இருநாடுகளுக்கு இடையிலான தொடர் (bilateral series), ஐபிஎல் தொடருடன் கிரிக்கெட் தொடங்க வேண்டும் என்று இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ரவி சாஸ்திரி கூறுகையில் ‘‘கடந்த இரண்டு மாதங்கள், மற்றும் தற்போது நடைபெற்று வரும் சூழ்நிலை விளையாட்டு வீரர்கள் கடந்த 70 முதல் 80 ஆண்டுகள் எதிர்கொள்ளாத மிக பயங்கரமான காலக்கட்டம். இதுபோன்ற நிலையை நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்கள்.

    போட்டியை நடத்துவதற்கான சூழ்நிலையை எட்டிய பின்னர், பைலேட்டரல் தொடர்தான் முதலில் நடத்த வேண்டும். உலக கோப்பை அல்லது பைலேட்டரல் தொடர் ஆகிய இரண்டில் இந்தியா எதை தேர்வு செய்யும்? என்று கேட்டால், நாங்கள் பைலேட்டரல் தொடர்தான் என்பதை நிச்சயமாக வலியுறுத்துவோம்.

    ஒட்டுமொத்த அணிகளும் உலக கோப்பைக்காக ஒரே நாட்டிற்குச் செல்வதற்குப் பதிலாக, ஒரு அணி மற்றொரு நாட்டிற்குச் சென்று ஒன்று அல்லது இரண்டு மைதாங்களில் விளையாடலாம். இந்தியா, உள்ளூரின் முக்கியமான ஐபிஎல் தொடரை இழக்க உள்ளது. இதனால் கிரிக்கெட் மீண்டும் தொடங்கும்போது, ஐபிஎல் தொடருக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்’’ என்றார்.
    Next Story
    ×