என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உலக கோப்பையை தள்ளி வைக்கலாம்: இங்கிலாந்து அதிரடி பேட்ஸ்மேன் சொல்கிறார்
Byமாலை மலர்4 May 2020 12:23 PM GMT (Updated: 4 May 2020 12:23 PM GMT)
வீரர்கள் போட்டிக்கு தயாராகும் நிலையை எட்டவில்லை என்றால் டி20 உலக கோப்பையை தள்ளி வைக்கலாம் என ஜேசன் ராய் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக செப்டம்பர் மாதம் வரை எல்லை மூடப்பட்டுள்ளது. அதன்பின் அக்டோபர் 3-வது வாரத்தில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது.
கொரோனா வைரஸ் தொற்று இன்னும் முடிவுக்கு வராததால் போட்டி நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் ஐசிசி இதுவரை போட்டியை நடத்தும் எண்ணத்தில்தான் உள்ளது.
இந்நிலையில் ஒருவேளை வீரர்கள் போட்டிக்கு தயாராகவில்லை என்றால் தொடரை தள்ளி வைப்பதில் அர்த்தம் உள்ளது என்று இங்கிலாந்து அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஜேசன் ராய் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜேசன் ராய் கூறுகையில் ‘‘சரியான வகையில் வீரர்கள் தயாராகாமல் ஆஸ்திரேலியா செல்ல முடியாத நிலை ஏற்பட்டால், அப்போது டி20 உலக கோப்பையை தள்ளி வைப்பதற்கான அர்த்தம் உள்ளது.
ஆனால் விளையாட வேண்டும் என்றால், வீரர்களின் வேலை கிரிக்கெட் விளையாட வேண்டும் என்பதுதான். டி20 போட்டிக்கு செல்ல வேண்டும் என்றால் குறைந்தது மூன்று வாரங்கள் தேவைப்படும். நாம் தயாராகுவதற்கு இந்த நாட்கள் தேவை என்பதை அனைத்து வீரர்களும் வலியுறுத்த வேண்டும்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X