search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பென் ஸ்டோக்ஸ்
    X
    பென் ஸ்டோக்ஸ்

    டெஸ்டில் மாற்றம் கொண்டு வந்தால் ‘ஈசி கிரிக்கெட்’ என அழைக்க வேண்டும்: பென் ஸ்டோக்ஸ்

    கிரிக்கெட்டில் டெஸ்ட் போட்டிதா மிகவும் உயர்ந்தது. அதை மாற்றினால் மிகவும் மோசமான நாளாக அது இருக்கும் என பென் ஸ்டோக்ஸ் எச்சரித்துள்ளார்.
    கிரிக்கெட்டில் டெஸ்ட் போட்டி மட்டுமே இருந்த நிலையில், காலத்திற்கு ஏற்ப ஒருநாள் கிரிக்கெட், டி20 கிரிக்கெட் போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

    ஐந்து நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டிதான் ஒரு கிரிக்கெட் வீரரை சோதிக்க தரமான போட்டி எனக் கருதப்படுகிறது. ஒரு பேட்ஸ்மேன் எவ்வளவு நேரம் பேட்டிங் செய்கிறார், ஒரு பந்து வீச்சாளர் தொடர்ந்து மனஉறுதியுடன் பந்து வீசுவதை பரிசோதிக்கும் போட்டியாக டெஸ்ட் போட்டி விளங்கி வருகிறது.

    ஆனால் டி20 கிரிக்கெட் போட்டி அறிமுகம் செய்யப்பட்ட பிறகு ஐந்து நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியை மைதானத்தில் வந்து பார்க்கும் ரசிகர்களின் ஆர்வம் குறைந்தது. இதனால் பெரும்பாலான டெஸ்ட் போட்டிகள் ரசிகர்கள் யாருமின்றி வெறிச்சோடிய நிலை காணப்படுகிறது.

    டி20 போட்டியில் விளையாடுவதால் டெஸ்ட் போட்டியில் பேட்ஸ்மேன்கள் நீண்ட நேரம் களத்தில் நிற்பதில்லை. வந்தோமா.. அதிரடியாக விளையாடினோமா.. சென்றோமா... என்ற மனநிலைக்கு வந்து விட்டனர். மேலும் ஆடுகளத்தில் முதல் நாளின் முதல் பந்தில் இருந்து பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருப்பதால் பேட்ஸ்மேன்களால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. இதனால் பெரும்பாலான டெஸ்ட் போட்டிகள் நான்கு நாட்களுக்கள் முடிவடைந்து விடுகிறது.

    இதற்கிடையில் ஐசிசி ஏராளமான சர்வதேச தொடர்களை நடத்த திட்டமிட்டுள்ளது. இதனால் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை நான்கு நாட்களாக குறைக்க ஆலோசித்து வருகிறது. இப்படி குறைத்தால் சர்வதேச தொடர்களுக்கு நாட்கள் கூடுதலாக கிடைக்கும் என ஐசிசி நினைக்கிறது.

    ஆனால் விராட் கோலி போன்ற வீரர்கள் டெஸ்ட் போட்டியில் எந்தவொரு மாற்றமும் கொண்டு வரக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் இங்கிலாந்து அணியின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான பென் ஸ்டோக்ஸும் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பென் ஸ்டோக்ஸ் கூறுகையில் ‘‘என்னைப் பொறுத்த வரைக்கும் டெஸ்ட் கிரிக்கெட்டுதான் மிகவும் உயர்ந்தது. டெஸ்ட் கிரிக்கெட் மடிந்து கொண்டு வருவதாக ஏராளமான பேச்சுகள் சமீபகாலமாக நடைபெற்ற வருகின்றன. ஆனால், இது எங்கிருந்து என்பது எனக்குத் தெரியவில்லை.

    நீங்கள் அனைத்து வீரர்கள், அல்லது சில வீரர்களிடம் கேட்டிருக்கலாம். ஆனால் விராட் கோலி, ஜோ ரூட் ஆகியோர் டெஸ்ட் எவ்வளவு சிறப்பானது என்பதை பற்றி பேசியது எனக்குத் தெரியும். என்னைப் பொறுத்த வரைக்கும் டெஸ்ட் கிரிக்கெட்டுதான் தூய்மையான வடிவம். டெஸ்ட் கிரிக்கெட் தற்போது எப்படி இருக்கிறதோ, அப்படியே இருக்க வேண்டும். டெஸ்ட் கிரிக்கெட் மாற்றப்பட்டால் அது மிகவும் மோசமான நாளாக இருக்கும்.

    அவர்கள் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் விதிமுறைகளை மாற்றினால், அவர்கள் டெஸ்ட் ‘ஈசி கிரிக்கெட்’ என அழைக்க வேண்டும் என நினைக்கிறேன்’’ என்றார்.
    Next Story
    ×