search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அஸ்வின்
    X
    அஸ்வின்

    பரஸ்பர உடன்பாடுடன் யார்க்‌ஷைர் கவுன்ட்டி அணியின் ஒப்பந்தத்தை ரத்து செய்தார் அஸ்வின்

    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கிரிக்கெட் போட்டி நடைபெற வாய்ப்பில்லாததால் யார்க்‌ஷைர் கவுன்ட்டி அணியின் ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளார் அஸ்வின்.
    இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின். தற்போது டெஸ்ட் போட்டியில் மட்டும் விளையாடி வருவதால் அதிக அளவில் ஓய்வு கிடைக்கிறது. இந்த நேரத்தை பயனுள்ளதாக மாற்றிக்கொள்ள திட்டமிட்ட அஸ்வின், இங்கிலாந்தில் நடைபெறும் கவுன்ட்டி போட்டியில் விளையாட முடிவு செய்தார்.

    ஏற்கனவே நாட்டிங்காம்ஷைர், வொர்செஸ்டர்ஷைர் அணிக்காக விளையாடி உள்ளார். வரும் சீசனில் யார்க்‌ஷைர் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.

    தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவில்லை. இங்கிலாந்தில் மே 28-ந்தேதி வரை கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாது என அறிவிக்கப்பட்டிருந்தது. கொரோனா தாக்கம் இங்கிலாந்தில் அதிகரித்து வருவதால் ஜூலை 1-ந்தேதி வரை போட்டிகள் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதனால் யார்க்‌ஷைர் அணியுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை பரஸ்பர உடன்பாடுடன் அஸ்வின் முறித்துக் கொண்டார். இந்த அணி ஏற்கனவே வெளிநாட்டு வீரர்களான தென்ஆப்பிரிக்காவின் மகாராஜ் மற்றும் வெஸ்ட் இண்டீஸின் நிக்கோலஸ் பூரன் ஆகியோரின் ஒப்பந்தத்தையும் ரத்து செய்துள்ளது.
    Next Story
    ×