என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் உமர் அக்மலுக்கு மூன்று ஆண்டுகள் தடை
Byமாலை மலர்27 April 2020 2:48 PM GMT (Updated: 27 April 2020 2:48 PM GMT)
ஊழல் தடுப்புக்குழுவின் விசாரணை அடிப்படையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருக்கு மூன்று ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டுள்ளது
பாகிஸ்தான் கிரிக்கெட்டின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் உமர் அக்மல். சிறப்பாக விளையாடிய போதிலும் கிரிக்கெட் போர்டு உடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அணியில் இருந்து கழற்றி விடப்பட்டார்.
கடந்த பிப்ரவரி மாதம் பாகிஸ்தான் சூப்பர் லீக் விளையாட இருந்தார். இவர் இடம் பிடித்திருந்த குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணி முதல் போட்டியில் வியைாடுவதற்கு முன் ஊழல் குற்றச்சாட்டில் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
இந்நிலையில் ஓய்வு பெற்ற நீதிபதி பாசல்-இ-மிரான் தலைமையில் ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை நடத்தியது. அதனடிப்படையில் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு அவருக்கு மூன்று ஆண்டுகள் தடைவிதித்துள்ளது. இதனால் அவரால் மூன்று ஆண்டுகள் எந்த வகையான கிரிக்கெட்டிலும் விளையாட முடியாது.
29 வயதாகும் உமர் அக்மல் பாகிஸ்தான் அணிக்காக 16 டெஸ்ட் போட்டிகளிலும், 121 ஒருநாள் போட்டிகளிலும், 84 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X