என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டி20 உலக கோப்பை மூன்று மாதங்கள் வரை தள்ளிப் போகலாம்: ஆரோன் பிஞ்ச்
Byமாலை மலர்24 April 2020 10:44 AM GMT (Updated: 24 April 2020 10:44 AM GMT)
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் மூன்று மாதங்கள் வரை தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக ஆரோன் பிஞ்ச் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கிரிக்கெட் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இனிமேல் எப்போது போட்டி நடைபெறும் என்று தெரியாத நிலை உள்ளது. தற்போதைய நிலையில் ஐபிஎல் 2020 சீசன், டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுமா? என்பதுதான் மில்லியன் கேள்வி.
ஐபிஎல் போட்டி மார்ச் 29-ந்தேதியில் இருந்து மே 24-ந்தேதி வரை நடைபெற இருந்தது. தற்போது அடுத்த அறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் மாதம் 18-ந்தேதியில் இருந்து நவம்பர் மாதம் 15-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. அங்கு செப்டம்பர் மாதம் வரை நாட்டின் எல்லை மூடப்பட்டுள்ளது. இதனால் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தள்ளிப்போனால் அந்த நேரத்தில் ஐபிஎல் போட்டி நடத்தப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் ஐசிசி உலக கோப்பையை நடத்த ஆர்வமாக உள்ளது. இந்நிலையில் இரண்டு அல்லது மூன்று மாதங்கள் வரை டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தள்ளிப்போகலாம். அதற்கு ஏற்ற வகையில் தயாராகி வருகிறோம் என ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பிஞ்ச் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆரோன் பிஞ்ச் கூறுகையில் ‘‘டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஒரு மாதம் அல்லது இரண்டு மாதம் அல்லது மூன்ற மாதங்கள் தள்ளிப்போக வாய்ப்புள்ளது நினைக்கிறேன். நம்மால் மீண்டும் கிரிக்கெட் போட்டியில் விளையாட முடியும். அது ரசிகர்கள் கூட்டத்துடன் அல்லது கூட்டம் இல்லாமலும் இருக்கலாம். இது மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நான் நினைக்கவில்லை.
ரசிகர்கள் யாருமின்றி நாங்கள் நியூசிலாந்துக்கு எதிராக விளையாடினோம். முதல் நான்னு அல்லது ஐந்து ஓவர்கள் விசித்திரமாக இருந்தது. ஆதன்பிறகு நாங்கள் வழக்கமான எங்களது வேலையில் கவனம் செலுத்தினோம்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X