என் மலர்
செய்திகள்

முகமது யூசுப்
கிளாஸ் வீரர்களான சச்சின், டிராவிட் உடன் கோலி, ரோகித் சர்மாவை ஒப்பிட முடியாது: முகமது யூசுப் சொல்கிறார்
தற்போதுள்ள இந்திய கிரிக்கெட் அணியில் சேவாக், விவிஎஸ் லக்ஷ்மண், கங்குலி, யுவராஜ் போன்ற வீரர்கள் இல்லை என்று முகமது யூசுப் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழ்ந்தவர் முகமது யூசுப். 45 வயதாகும் இவர் அந்த அணிக்காக 90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 24 சதங்களுடன் 7530 ரன்களும், 288 ஒருநாள் போட்டிகளில் 15 சதங்களுடன் 9720 ரன்களும் அடித்துள்ளார்.
முகமது யூசுப் இந்தியாவின் நட்சத்திர வீரர்களான சச்சின் தெண்டுல்கர், ராகுல் டிராவிட், சேவாக், கங்குலி, யுவராஜ் சிங், லக்ஷ்மண் ஆகியோருடன் விளையாடியுள்ளார். இந்நிலையில் சச்சின், டிராவிட் ஆகியோரின் தரத்துடன் விராட் கோலி, ரோகித் சர்மாவை ஒப்பிட இயலாது என்று என்று தெரிவித்துள்ளார்.
மேலும் முகமது யூசுப் கூறுகையில் ‘‘கடந்த காலத்தில் இந்தியா, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா போன்ற அணிகளை பார்த்தீர்கள் என்றால், மூன்று அல்லது நான்கு தரமான வீரர்கள் இருந்திருப்பார்கள். உதாரணத்திற்கு இந்தியாவை எடுத்துக் கொண்டால் டிராவிட், சச்சின் தெண்டுல்கர், சேவாக், கங்குலி, லக்ஷ்மண், யுவராஜ் போன்றவர்கள் இருந்தார்கள். இந்த ஆறு பேட்ஸ்மேன்களும் ஒரு அணியில் விளையாடினார்கள்.
தற்போதுள்ள இந்திய அணி அதுபோன்ற பேட்ஸ்மேன்கள் இல்லை. கிளாஸ் வீரர்களான சச்சின் தெண்டுல்கர், ராகுல் டிராவிட் உடன் தற்போதுள்ள விராட் கோலி, ரோகித் சர்மா போன்றவர்களை ஒப்பிட முடியாது’’ என்றார்.
Next Story






