என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்திய வீரர்கள் 100 ரன்களுக்கு மேல் அடிக்க இதுதான் காரணம் என போட்டு உடைத்தார் இன்சமாம் உல் ஹக்
Byமாலை மலர்23 April 2020 9:51 AM GMT (Updated: 23 April 2020 9:51 AM GMT)
பாகிஸ்தான் வீரர்கள் 30, 40 ரன்கள் அடிக்கும்போது இந்திய வீரர்கள் 100 ரன்களும் அடிப்பதற்கு காரணம், அவர்கள் அவர்களுக்காகவே விளையாடுவதுதான் என இன்சமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல ஹக். இவர் ரமீஸ் ராஜாவுடன் ஆன்லைன் மூலம் உரையாடினார். அப்போது அவர் விளையாடிய காலத்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் அதிக ரன்கள் அடித்தாலும், பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் சிறப்பாகவே விளையாடினோம் எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்சமாம் உல் ஹக் கூறுகையில் ‘‘நாங்கள் இந்தியாவுக்கு எதிராக விளையாடும்போது, இந்தியாவின் பேட்டிங் எங்களை விட வலிமையாக பேப்பரில் இருக்கும். ஆனால், எங்களுடைய பேட்ஸ்மேன்கள் 30 அல்லது 40 ரன்கள் அடித்தால் கூட, அது அணிக்காக இருக்கும்.
ஆனால், இந்திய பேட்ஸ்மேன்கள் 100 ரன்கள் அடித்தால் கூட, அது அவர்களுடைய சொந்த நலனுக்காக இருக்கும். இதுதான் இரண்டு அணிகளுக்கும் இடையிலான வேறுபாடு’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X