search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கவுதம் கம்பிர்
    X
    கவுதம் கம்பிர்

    அதிக காலம் கேப்டனாக நீடித்திருந்தால் ஏராளமான சாதனைகளை படைத்திருப்பார்: கவுதம் கம்பிர் சொல்கிறார்

    இந்திய அணியின் கேப்டன் பதவியை அதிக காலம் இருந்திருந்தால் ஏராளமான சாதனைகளை படைத்திருப்பார் என்று கவுதம் கம்பிர் தெரிவித்துள்ளார்.
    இந்திய அணியின் முன்னணி இடது கை பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் கவுதம் கம்பிர். இவர் கங்குலி கேப்டனாக இருந்தபோது இந்திய அணியில் அறிமுகம் ஆனார். அதன்பின் டிராவிட், அனில் கும்ப்ளே, எம்எஸ் டோனி, விராட் கோலி ஆகியோரின் தலைமையில் விளையாடிள்ளார்.

    எம்எஸ் டோனி தலைமையில் இவர் விளையாடிய காலத்தில் இந்தியா டி20 மற்றும் 50 ஓவர் உலக கோப்பையை  வென்றது. இருந்தாலும் அனில் கும்ப்ளே இன்னும் நீண்ட காலம் கேப்டனாக நீடித்திருந்தால் ஏராளமான சாதனைகள் படைத்திருப்பார் என்று கவுதம் காம்பிர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கவுதம் கம்பிர் கூறுகையில் ‘‘கங்குலி இந்திய அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டார். ஒரு கேப்டன் யார் என்றால் நான் நிச்சயம் அனில் கும்ப்ளே அதிக காலம் பதவியில் இருக்க வேண்டும் என்று விரும்புவேன். அவருக்கு கீழ் நான் ஆறு டெஸ்ட் போட்டிகளில்தான் விளையாடினேன். அவரால் நீண்ட காலத்திற்கு இந்திய அணியின் கேப்டனாக இருக்க முடியில்லை. அப்படி இருந்திருந்தால் ஏராளமான சாதனைகள் படைத்திருப்பார்.’’ என்றார்.

    அனில் கும்ப்ளே, கவுதம் கம்பிர்

    ராகுல் டிராவிட் 2007-ல் கேப்டன் பதவியை ராஜினாமா செய்தபோது, 17 வருடம் விளையாடிய நிலையில் அனில் கும்ப்ளே டெஸ்ட் அணி கேப்டனாக இருந்தார். அப்போது எம்எஸ் டோனி ஒருநாள் மற்றும் டி20 அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார். அதன்பின் எம்எஸ் டோனியிடம் டெஸ்ட் அணிக்கான கேப்டன் பதவியும் வழங்கப்பட்டது.
    Next Story
    ×