என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கிரிக்கெட் வீரர்களுக்கான ஊதிய பிடித்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை: பிசிசிஐ அதிகாரி தகவல்
Byமாலை மலர்10 April 2020 1:09 PM GMT (Updated: 10 April 2020 1:09 PM GMT)
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கிரிக்கெட் போட்டிகள் பாதிக்கப்பட்ட போதிலும் வீரர்களின் ஊதியத்தில் கை வைக்கமாட்டோம் என பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாமல் உள்ளது. மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்கள் முற்றிலுமாக விளையாட்டு போட்டிகள் இருக்காது என்பது உறுதியாகியுள்ளது. இதனால் ஒவ்வொரு நாட்டின் கிரிக்கெட் போர்டுகளும் மிகப்பெரிய அளவில் இழப்பை சந்திக்க இருக்கிறது.
இதனால் முதல் மூன்று மாதத்திற்கான வீரர்களின் ஊதியத்தை குறைக்க ஆலோசனை நடத்தி வருகின்றன. ஆனால் பிசிசிஐ மத்திய ஒப்பந்த வீரர்களுக்கான ஊதியத்தை குறைக்கும் எண்ணத்தில் இல்லை என பெயரை தெரிவிக்க விரும்பாத பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அந்த அதிகாரி கூறுகையில் ‘‘மார்ச் 24-ந்தேதியில் இருந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எந்தவிதமான முடிவு வந்தாலும் பிசிசிஐ அதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறது. மத்திய ஒப்பந்த வீரர்களுக்கான காலாண்டு தொகை அவர்களுக்கு கிடைத்தே தீரும்.
மேலும் போட்டிக்கான தொகை இந்தியா, இந்தியா ‘ஏ’ அணிகளுக்கான விளையாடிய வீரர்களுக்கு வழங்கப்படும். நிதி வருடத்திற்குள் இந்த தொகைகள் வீரர்களுக்கு சென்றடையும்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X