என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஐபிஎல் 2020 சீசனை ரசிகர்களின்றி பூட்டிய மைதானத்திற்குள் நடத்தலாம்: ஹர்பஜன் சிங்
Byமாலை மலர்7 April 2020 9:52 AM GMT (Updated: 7 April 2020 9:52 AM GMT)
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 21 நாட்கள் கொண்ட ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட வாய்ப்பில்லை என கூறப்படுவதால் ஐபிஎல் நடக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஐபிஎல் போட்டி ஏப்ரல் 15-ந்தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது. ஆனால் அந்தந்த மாநில அரசுகள் ஊரடங்கை நீட்டிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒருவேளை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்காவிடில் போட்டி நடைபெறும் என கிரிக்கெட் வீரர்கள் நம்புகிறார்கள். அப்படி சாத்தியம் இருந்தால் போட்டியை ரசிகர்களின்றி பூட்டிய மைதானத்திற்கள் நடத்தலாம் என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஹர்பஜன் சிங் கூறுகையில் ‘‘பார்வையாளர்கள் மிகவும் முக்கியமானதுதான். ஆனால் தற்போது உள்ள சூழ்நிலையில் அவர்கள் இல்லாமல் போட்டி நடைபெறும் என்ற மனநிலையில் நான் இல்லை. ஒரு வீரராக நான் இந்த உணர்வை பெற விரும்பமாட்டேன். ஒவ்வொரு வீரர்களும் ஐபிஎல் போட்டிகளை தொலைக்காட்சி மூலம் பார்க்க முடியும் என்பது உறுதி.
அப்படி நடந்தாலும் வீரர்களின் பாதுகாப்பு போட்டிகள் நடைபெறும் இடத்திலும், அணிகள் ஓட்டல்களிலும், விமானத்திலும் உறுதிப்படுத்துவது அவசியம். ஏராளமான உயிர்கள் இருக்கின்றன. ஆகவே எல்லாம் சரியான நிலையில் இருக்கிறது என்பதை உறுதி செய்யப்பட்ட பின்னர்தான் நாம் ஐபிஎல் போட்டிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X