search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜோஸ் பட்லர்
    X
    ஜோஸ் பட்லர்

    வெவ்வேறு இடத்தில் இரண்டு இங்கிலாந்து அணிகள் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட வாய்ப்பு: ஜோஸ் பட்லர்

    கிரிக்கெட் போட்டி மீண்டும் தொடங்கும்போது இரண்டு சர்வதேச இங்கிலாந்து அணிகள் வெவ்வேறு இடத்தில் விளையாட வேண்டும் என்ற யோசனை சரியானதுதான் என ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.
    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இங்கிலாந்தில் மே 28-ந்தேதி வரை எந்தவித விளையாட்டு போட்டிகளும் நடைபெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தற்போதுள்ள சூழ்நிலையில் கிரிக்கெட் போட்டி எப்போது ஆரம்பிக்கும் எனத்தெரியவில்லை. இங்கிலாந்து அணி இலங்கைக்கு எதிராக விளையாட சென்றபோதுதான் கொரோனா தொற்று காரணமாக நாடு திரும்பியது. இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, அயர்லாந்து போன்ற நாடுகளுக்கு எதிராக விளையாட வேண்டியுள்ளது.

    ஒருவேளை மீண்டும் கிரிக்கெட் போட்டி நடைபெற்றால் சில தொடர்களை ரத்து செய்ய வேண்டும் என்ற நிலை உள்ளது. அதற்கு மாற்று ஏற்பாடாக இரண்டு சர்வதேச அணிகள் வெவ்வேறு இடத்தில் ஒரே நேரத்தில் விளையாட சாத்தியக்கூறு உள்ளதாக இங்கிலாந்து ஒயிட்பால் கிரிக்கெட் அணியின் கேப்டன் இயன் மோர்கன் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் அந்த அணியின் அதிரடி பேட்ஸ்மேனான ஜோஸ் பட்லரும் அதே கருத்தை வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து ஜோஸ் பட்லர் கூறுகையில் ‘‘இயன் மோர்கன் கூறியதை நான் பார்த்தேன் அந்த வகையில் இதற்கு வாய்ப்பு இருப்பதாக நான் கருதுகிறேன்.

    நிர்வாகம் அடிப்படையில் இது சாத்தியம் என்றால், ரசிகர்கள் போட்டியை ரசிப்பார்கள். ஒரே நாளில் இரண்டு போட்டிகள் நடைபெற சாத்தியம் என்றால், வெவ்வேறு இடத்தில் நடத்தலாம். இது சரியானது. இதுகுறித்து ஆலோசிக்கலாம்’’ என்றார்.
    Next Story
    ×