search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    யுவராஜ் சிங்
    X
    யுவராஜ் சிங்

    பிரதமர் நிவாரண நிதிக்கு யுவராஜ் சிங் ரூ. 50 லட்சம் வழங்கினார்

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆன யுவராஜ் சிங் பிரதமர் நிவாரண நிதிக்கு 50 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார்.
    கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்காக நிதி வழங்கலாம் என பிரதமர் மோடி ஏற்கனவே அறிவித்திருந்தார்.

    அதன்படி பிரதமர் நிவாரண நிதிக்கு பொதுமக்கள், பிரபலங்கள், தொழில் அதிபர்கள், விளையாட்டு வீரர்கள் நிதி அளித்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவின் முன்னாள் முன்னணி மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான யுவராஜ் சிங் பிரதமர் நிவாரண நிதிக்கு 50 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார்.

    ஏற்கனவே ரெய்னா, ரோகித் சர்மா, சச்சின் தெண்டுல்கர், விராட் கோலி, கங்குலி, தவான், ரகானே, கவுதம் கம்பிர் போன்றோர் நிதியுதவி அளித்துள்ளனர். யுவராஜ் சிங் இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘நாம் ஒருங்கிணைந்து நிற்கும்போது மிகவும் வலிமையடைவோம்’’ எனப் பதிவிட்டுள்ளார்.
    Next Story
    ×