search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ் பரிசோதனை
    X
    கொரோனா வைரஸ் பரிசோதனை

    குரோசியாவைச் சேர்ந்தவர்கள் மேலும் 3 குத்துச்சண்டை வீரர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு

    லண்டன் ஒலிம்பிக் தகுதி சுற்றில் பங்கேற்ற குரோசியாவைச் சேர்ந்த மேலும் 3 குத்துசண்டை வீரர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது உறுதியாகி உள்ளது.
    லண்டன்:

    உலகம் முழுவதும் கொரோனா வைரசால் 30 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். சுமார் 6 லட்சத்து 60 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

    துருக்கி நாட்டைச் சேர்ந்த குத்துச்சண்டை வீரர்கள் 2 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு இருந்தது. இருவரும் லண்டனில் நடந்த ஒலிம்பிக் தகுதி சுற்று போட்டியில் பங்கேற்றவர்கள்.

    டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான ஐரோப்பிய தகுதி சுற்று குத்துச்சண்டை போட்டிகள் சமீபத்தில் லண்டனில் நடைபெற்றது. 3 நாட்களுக்குப் பிறகு இந்தப் போட்டி நிறுத்தப்பட்டது. இந்த போட்டியில் கலந்து கொண்டு விட்டு துருக்கி திரும்பிய போதுதான் 2 வீரர்களை இந்த வைரஸ் தாக்கியுள்ளது.

    இதேப் போல தலைமை பயிற்சியாளருக்கும் இந்த நோய் தொற்று ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் ( ஐ.ஓ.சி.)மீது விமர்சனம் எழுந்தது. மருத்துவ எச்சரிக்கையை புறக்கணித்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

    இந்த நிலையில் லண்டன் ஒலிம்பிக் தகுதி சுற்றில் பங்கேற்ற மேலும் 3 குத்துசண்டை வீரர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது உறுதியாகி உள்ளது. இவர்கள் குரோசியா நாட்டைச் சேர்ந்தவர்கள்.

    இதுவரை 6 பேர் பாதிக்கப்பட்டதால் சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் லண்டன் குத்துச்சண்டை போட்டி அமைப்பாளரை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.
    Next Story
    ×