search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜப்பானில் ஒலிம்பிக் ஜோதியை ஆர்வமாக படம் எடுக்கும் பொதுமக்கள்
    X
    ஜப்பானில் ஒலிம்பிக் ஜோதியை ஆர்வமாக படம் எடுக்கும் பொதுமக்கள்

    கொரோனா பீதிக்கிடையில் டோக்கியோ ஒலிம்பிக் ஜோதியைக் காண திரண்ட ஆயிரக்கணக்கான ஜப்பானியர்

    உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படும் நிலையில் ஜப்பானில் ஒலிம்பிக் ஜோதியை பார்க்க ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர்.
    சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி ருத்ரதாண்டவம் ஆடி வருகிறது. சீனாவை அடுத்து இத்தாலியில் மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஜப்பானிலும் கொரோனா வைரஸ் தாக்குதல் இருந்து வருகிறது. இதனால் ஜூலை மாதம் 24-ந்தேதி தொடங்கு ஆகஸ்ட் மாதம் 9-ந்தேதி வரை நடைபெற இருக்கும் டோக்கியோ ஒலிம்பிக் தொடர் நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. சர்வதேச ஒலிம்பிக் சங்கம் இதுவரை இறுதி முடிவு எடுக்கவில்லை.

    ஜப்பான் எப்படியாவது போட்டியை நடத்திவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது. கொரோனா வைரஸ் பரவலை ஜப்பான் வெகுவாக தடுத்துவிட்டது. இதனால் ஒலிம்பிக் போட்டியை நடத்தி விடலாம் என்பதில் நம்பிக்கையில் உள்ளது. ஒருவேளை ஒலிம்பிக் போட்டி ரத்து செய்யப்பட்டால் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் இழப்பு ஏற்படும். இதனால் மற்ற நாடுகளுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் ஜப்பான் நடவடிக்கைகைள் எடுத்து வருகிறது.

    கடந்த சில நாட்களுக்கு முன் கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் நகரில் முதன்முதலாக ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்பட்டு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. ஆனால் கொரோனா தொற்று அச்சுறுத்தலால் ஊர்வலம் ரத்து செய்யப்பட்டது. அதன்பின் ஒலிம்பிக் ஜோதிக்கான பேட்டனை ஜப்பான் தனி விமானம் மூலம் கிரீஸ் நாட்டில் இருந்து சொந்த நாட்டுக்கு கொண்டு வந்தது.

    இந்நிலையில் ஒலிம்பிக் ஜோதி மியாகியில் உள்ள செண்டை நிலையத்தில் ஏற்றப்பட்டது. அப்போது கொரோனோ வைரஸ் தொற்றை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் ஆயிரக்கணக்கில் மக்கள் ஒரே இடத்தில் திரண்டு இந்த நிகழ்ச்சியை பார்த்து ரசித்தனர்.

    ஒலிம்பிக் ஜோதி

    பெரும்பாலான மக்கள் முகமூடி இல்லாமல் வந்திருந்தனர். சிலர் மட்டுமே முகமூடி அணிந்திருந்தனர். உலகமே அச்சத்தி்ல் இருக்கும் நேரத்தில் ஜப்பானில் மட்டும் இப்படி ஒன்று கூடிய விவகாரம் உலக நாடுகளுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதற்கிடையில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை தெரிவிப்பதில் ஜப்பான் வெளிப்படைத்தன்மையாக இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுவரை ஜப்பானில் 1101 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 41 பேர் உயிரிழந்துள்ளனர். 215 பேர் குணமடைந்துள்ளனர். புதிதாக யாரும் பாதிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.-
    Next Story
    ×