search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஷாகித் அப்ரிடி
    X
    ஷாகித் அப்ரிடி

    பாகிஸ்தான் சூப்பர் லீக்: புள்ளிகள் பட்டியலில் முதல் இடம் பிடித்த அணிக்கு கோப்பையை வழங்க வேண்டும்- அப்ரிடி

    பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் நாக்அவுட் மற்றும் இறுதி போட்டி ரத்து செய்யப்பட்டதால் புள்ளிகள் பட்டியலில் முதல் இடம் பிடித்த அணிக்கு சாம்பியன் பட்டம் வழங்க வேண்டும் என அப்ரிடி தெரிவித்துள்ளார்.
    ஆறு அணிகள் பங்கேற்ற பாகிஸ்தான் சூப்பர் லீக் கடந்த மாதத்தில் இருந்து நடைபெற்று வந்தது. தற்போது கொரோனா வைரஸ் தொற்று அச்சத்தை ஏற்படுத்தியதால் லீக் சுற்றோடு தொடர் ரத்து செய்யப்பட்டது. இதில் முல்தான் சுல்தான்ஸ் அணி 10 ஆட்டங்களில் 6-ல் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தில்  உள்ளது.

    லீக் ரத்தானதால் முல்தான் சுல்தான்ஸ் அணிக்கு சாம்பியன் பட்டம் வழங்க வேண்டும் என்று அப்ரிடி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அப்ரிடி டுவிட்டரில் கூறியிருப்பதாவது ‘‘பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் முடிவு கவலை அளிக்கிறது. என்றாலும் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு முக்கியமானது. வெளிநாட்டு வீரர்கள் அவர்களது சொந்த நாடு திரும்புவது அவசியம். இந்த முடிவை முன்னதாக எடுத்திருக்க வேண்டும். டிராபியை பொறுத்த வரையில் புள்ளிகள் பட்டியலில் முதல் இடம் பிடித்த அணிக்கு வழங்க வேண்டும்’’ என்றார்.
    Next Story
    ×