என் மலர்
செய்திகள்

அனைத்திந்திய கால்பந்து சம்மேளனம்
கொரோனா அச்சுறுத்தல் - இந்திய கால்பந்து லீக் போட்டிகள் ஒத்திவைப்பு
இந்தியாவில் நடைபெறவுள்ள இந்திய கால்பந்து லீக் போட்டிகள் மார்ச் 31ம் தேதி வரை ஒத்திவைக்கப்படுகிறது என அனைத்து இந்திய கால்பந்து சம்மேளனம் அறிவித்துள்ளது.
புதுடெல்லி:
கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் பொது நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் மற்றும் மக்கள் கூடும் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இந்தியாவில் நடைபெற உள்ள கால்பந்து லீக் போட்டிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக, அனைத்திந்திய கால்பந்து சம்மேளனம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம், பல்வேறு மாநில அரசுகளின் பரிந்துரையை ஏற்று இந்தியாவில் நடைபெறவுள்ள இந்திய கால்பந்து லீக் போட்டிகள் நாளை முதல் மார்ச் 31ம் தேதி வரை ஒத்திவைக்கப்படுகிறது என அனைத்து இந்திய கால்பந்து சம்மேளனம் அறிவித்துள்ளது.
Next Story






