search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித்
    X
    டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித்

    ஐபிஎல் 2020 சீசனில் கலந்து கொள்வது வீரர்களின் முடிவு: ஆஸ்திரேலியா கிரிக்கெட் அறிவிப்பு

    கொரோனா வைரஸ் பீதியில் ஐபிஎல் தொடர் நடக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் வீரர்கள் கலந்து கொள்வது அவர்களின் சொந்த முடியும் என ஆஸ்திரேலியா கிரிக்கெட் அறிவித்துள்ளது.
    ஐபிஎல் 2020 சீசன் மார்ச் மாதம் 29-ந்தேதி தொடங்குகிறது. ஆனால் கொரோனா பீதியில் ஆட்டம் நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையில் கட்டாயம் போட்டியை நடத்த வேண்டுமென்றால்  பார்வையாளர்கள் இல்லாமல் மூடிய மைதானத்திற்குள் நடத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    இதனால் போட்டி நடைபெற்றால் ரசிகர்கள் இல்லாமல் நடைபெறும். இந்நிலையில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வீரர்கள் கலந்து கொள்வது அவர்களுடைய தனிப்பட்ட விருப்பம் என்று அந்நாட்டு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.
    Next Story
    ×