என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
போட்டி தள்ளிவைப்பு அல்லது ரசிகர்கள் இல்லாமல் ஆட்டம்: மராட்டிய அரசு திட்டவட்டம்
Byமாலை மலர்12 March 2020 10:04 AM GMT (Updated: 12 March 2020 10:04 AM GMT)
வான்கடே மைதானத்தில் நடக்கக்கூடிய போட்டிக்கான டிக்கெட் விற்பனை இல்லை, இரண்டே வாய்ப்புகள்தான் என்று மராட்டிய அரசு அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் 7 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு பொதுவான இடத்தில் அதிக அளவில் கூடுவதை மக்கள் தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
இதற்கிடையே ஐபிஎல் போட்டிகள் தள்ளிப்போகலாம் என்று மகாராஷ்டி மாநில மந்திரி ஒருவர் தெரிவித்திருந்தார். நேற்று அம்மாநில அரசு ஆலோசனை நடத்தியது. அந்தக்கூட்டத்தில் ஐபிஎல் டிக்கெட் விற்பனை செய்யப்படமாட்டாது என முடிவு எடுக்கப்பட்டதாக மகாராஷ்டிரா மாநில சுகாதார மந்திரி ராஜேஷ் டோபே தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘ஆலோசனைக்குப் பிறகு, நாங்கள் இரண்டு வாய்ப்புகளை உருவாக்கியுள்ளோம். ஒன்று போட்டியை தள்ளி வைக்க வேண்டும். அல்லது போட்டி ரசிகர்கள் இல்லாமல் நடத்தப்பட வேண்டும் என்பதுதான் அது. ஆனால் டிக்கெட் விற்பனை செய்யப்பட மாட்டாது என்பது உறுதி’’ என்றார்.
இதனால் வான்கடே மைதானத்தில் போட்டி நடைபெறுவது சந்தேகம்தான். அப்படி போட்டி நடைபெற்றால் டிவி ஒளிபரப்பாளர்கள் மட்டுமே மைதானத்திற்குள் அனுமதிக்கப்பட வாய்ப்புள்ளது.
இதற்கிடையே ஐபிஎல் போட்டிகள் தள்ளிப்போகலாம் என்று மகாராஷ்டி மாநில மந்திரி ஒருவர் தெரிவித்திருந்தார். நேற்று அம்மாநில அரசு ஆலோசனை நடத்தியது. அந்தக்கூட்டத்தில் ஐபிஎல் டிக்கெட் விற்பனை செய்யப்படமாட்டாது என முடிவு எடுக்கப்பட்டதாக மகாராஷ்டிரா மாநில சுகாதார மந்திரி ராஜேஷ் டோபே தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘ஆலோசனைக்குப் பிறகு, நாங்கள் இரண்டு வாய்ப்புகளை உருவாக்கியுள்ளோம். ஒன்று போட்டியை தள்ளி வைக்க வேண்டும். அல்லது போட்டி ரசிகர்கள் இல்லாமல் நடத்தப்பட வேண்டும் என்பதுதான் அது. ஆனால் டிக்கெட் விற்பனை செய்யப்பட மாட்டாது என்பது உறுதி’’ என்றார்.
இதனால் வான்கடே மைதானத்தில் போட்டி நடைபெறுவது சந்தேகம்தான். அப்படி போட்டி நடைபெற்றால் டிவி ஒளிபரப்பாளர்கள் மட்டுமே மைதானத்திற்குள் அனுமதிக்கப்பட வாய்ப்புள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X