என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒலிம்பிக் தகுதிச்சுற்று குத்துச்சண்டை: மேரிகோம், அமித் பன்ஹால் கால்இறுதிக்கு தகுதி
Byமாலை மலர்8 March 2020 4:47 AM GMT (Updated: 8 March 2020 4:47 AM GMT)
ஒலிம்பிக் தகுதிச்சுற்று குத்துச்சண்டை போட்டியில், மேரிகோம், அமித் பன்ஹால் ஆகியோர் காலிறுதிக்கு தகுதி பெற்றனர்.
அம்மான்:
ஒலிம்பிக் போட்டி டோக்கியோவில் ஜூலை 24-ம் தேதி முதல் ஆகஸ்டு 9-ம் தேதி வரை நடக்கிறது. இந்தப் போட்டிக்கான ஆசிய தகுதிச்சுற்று குத்துச்சண்டை போட்டி ஜோர்டானில் உள்ள அம்மான் நகரில் நடைபெற்று வருகிறது.
இதில், பெண்களுக்கான 51 கிலோ எடைப்பிரிவில் 6 முறை உலக சாம்பியனான இந்திய வீராங்கனை மேரி கோம் 5-0 என்ற கணக்கில் நியூசிலாந்தின் தாஸ்மைன் பென்னியை விரட்டியடித்து காலிறுதியை எட்டினார். மேரிகோம் அடுத்து பிலிப்பைன்சின் ஐரிஷ் மாக்னோவை எதிர்கொள்கிறார்.
இதேபோல், ஆண்களுக்கான 52 கிலோ உடல் எடைப்பிரிவில் இந்திய வீரர் அமித் பன்ஹால், மங்கோலியா வீரர் எங்மனாடாக் கார்குவை சந்தித்தார். இதில், அமித் பன்ஹால் 3-2 என்ற கணக்கில் எங்மனாடாக்கை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். காலிறுதியில் அமித் பன்ஹால் பிலிப்பைன்ஸ் வீரர் கார்லோ பாலமை எதிர்கொள்கிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X