search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னையின் எப்.சி
    X
    சென்னையின் எப்.சி

    ஐஎஸ்எல் கால்பந்து - சென்னையில் நடைபெறும் அரையிறுதி போட்டிக்கான டிக்கெட் விற்பனை

    சென்னையில் நடைபெற உள்ள ஐ.எஸ்.எல். கால்பந்தின் அரையிறுதி போட்டிக்கான டிக்கெட் விற்பனை நடைபெற்று வருகிறது.
    சென்னை:

    10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடைபெற்றது. லீக் போட்டிகள் முடிந்துள்ள நிலையில் கோவா, கொல்கத்தா, பெங்களூரு மற்றும் சென்னை அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.

    இந்த தொடரின் முதல் அரையிறுதி ஆட்டம் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நாளை மறுநாள் நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் 2 முறை சாம்பியனான சென்னையின் எப்.சி. அணி, எப்.சி.கோவா அணியை எதிர்கொள்கிறது. இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டிக்கான டிக்கெட் விலை ரூ.250 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை வரை நேரு ஸ்டேடியத்தில் (வாசல் எண் 10) உள்ள புக் மை ஷோ பாக்ஸ் ஆபீசில் காலை 11 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறும் என்றும் போட்டி நாளன்று டிக்கெட் விற்பனை நேரு உள்விளையாட்டு அரங்குக்கு (வாசல் எண் 1) மாற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புக் மை ஷோ செயலி மற்றும் இணையதளம் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×