என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒரேநாள் இரவில் நம்பிக்கையை இழந்து விடாதீர்கள்: இந்திய பந்து வீச்சாளர்கள் யுனிட் மீது மெக்ராத் நம்பிக்கை
Byமாலை மலர்26 Feb 2020 2:36 PM GMT (Updated: 26 Feb 2020 2:36 PM GMT)
வெலிங்டன் டெஸ்டில் இந்திய பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசவில்லை என்பதற்கான ரசிகர்கள் நம்பிக்கை இழந்து விட வேண்டாம் என மெக்ராத் தெரிவித்துள்ளார்.
வெலிங்டனில் நடைபெற்ற நியூசிலாந்து - இந்தியா இடையிலான முதல் டெஸ்டில் இந்தியாவின் பந்து வீச்சு மிகப்பெரிய அளவில் எடுபடவில்லை. அதேபோல் பேட்டிங்கிலும் சொதப்பினர்.
இந்திய பந்து வீச்சாளர்கள் மீண்டும் நல்ல நிலைமைக்கு திரும்புவார்கள். ஒரேநாள் இரவில் அவர்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை ரசிகர்கள் இழந்து விட வேண்டாம் என ஆஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மெக்ராத் கூறுகையில் ‘‘இந்திய பந்து வீச்சாளர்கள் மீது நான் இன்னும் முழு நம்பிக்கை வைத்துள்ளேன். நியூசிலாந்து தொடருக்கு முன் சில வீரர்கள் காயம் அடைந்தனர். இஷாந்த் சர்மா காயத்தில் இருந்து திரும்பியுள்ளார். திரும்பிய முதல் போட்டியிலேயே ஐந்து விக்கெட் வீழ்த்தினார். பும்ரா காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ளார்.
இந்தியாவின் பந்து வீச்சு யுனிட் உலகத்தரம் வாய்ந்தது. அதில் எந்த சந்தேகமும் இல்லை. பந்து வீச்சில் எந்த பிரச்சினையும் இருப்பதாக நான் பார்க்கவில்லை. ஒரே நாள் இரவில் அவர்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை இழந்துவிட வேண்டாம். நியூசிலாந்து டாஸ் மிகமிக முக்கியமானது. என்றாலும் ரன்கள் குவிக்க வேண்டியது அவசியம்.
கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக இஷாந்த் சர்மா மீண்டு வந்துள்ளது ஈர்க்கக்கூடியது. சர்வதேச அளவில் அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிந்து விடும் என்று நினைத்தேன். ஆனால், அவராகவே அவரை புதுப்பித்துக் கொண்டு சிறப்பாக பந்து வீசிக் கொண்டிருக்கிறார்’’ என்றார்.
இந்திய பந்து வீச்சாளர்கள் மீண்டும் நல்ல நிலைமைக்கு திரும்புவார்கள். ஒரேநாள் இரவில் அவர்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை ரசிகர்கள் இழந்து விட வேண்டாம் என ஆஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மெக்ராத் கூறுகையில் ‘‘இந்திய பந்து வீச்சாளர்கள் மீது நான் இன்னும் முழு நம்பிக்கை வைத்துள்ளேன். நியூசிலாந்து தொடருக்கு முன் சில வீரர்கள் காயம் அடைந்தனர். இஷாந்த் சர்மா காயத்தில் இருந்து திரும்பியுள்ளார். திரும்பிய முதல் போட்டியிலேயே ஐந்து விக்கெட் வீழ்த்தினார். பும்ரா காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ளார்.
இந்தியாவின் பந்து வீச்சு யுனிட் உலகத்தரம் வாய்ந்தது. அதில் எந்த சந்தேகமும் இல்லை. பந்து வீச்சில் எந்த பிரச்சினையும் இருப்பதாக நான் பார்க்கவில்லை. ஒரே நாள் இரவில் அவர்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை இழந்துவிட வேண்டாம். நியூசிலாந்து டாஸ் மிகமிக முக்கியமானது. என்றாலும் ரன்கள் குவிக்க வேண்டியது அவசியம்.
கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக இஷாந்த் சர்மா மீண்டு வந்துள்ளது ஈர்க்கக்கூடியது. சர்வதேச அளவில் அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிந்து விடும் என்று நினைத்தேன். ஆனால், அவராகவே அவரை புதுப்பித்துக் கொண்டு சிறப்பாக பந்து வீசிக் கொண்டிருக்கிறார்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X