என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புரோ லீக் ஹாக்கி- ஆஸ்திரேலிய அணியிடம் இந்தியா தோல்வி
Byமாலை மலர்22 Feb 2020 3:43 AM GMT (Updated: 22 Feb 2020 3:43 AM GMT)
புரோ லீக் ஹாக்கி தொடரில் புவனேசுவரத்தில் நடந்த ஆட்டத்தில் இந்திய அணி 4-3 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது.
புவனேசுவரம்:
9 அணிகள் இடையிலான புரோ லீக் ஆக்கி போட்டி பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் புவனேசுவரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்த ஆட்டத்தில் தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள இந்திய அணி, நடப்பு சாம்பியனும் 2-ம் நிலை அணியுமான ஆஸ்திரேலியாவுடன் மல்லுகட்டியது. இதில் இந்திய அணியின் தடுப்பு அரணை உடைத்தெறிந்த ஆஸ்திரேலியாவின் கை ஆரம்பத்திலேயே பலமாக ஓங்கியது. டைலன் வோதர்ஸ்பூன் (6-வது நிமிடம்), டாம் விக்ஹாம் (18-வது நிமிடம்), லாச்லன் ஷார்ப் (41-வது நிமிடம்), ஜாக்கப் ஆண்டர்சன் (42-வது நிமிடம்) ஆகிய ஆஸ்திரேலிய வீரர்கள் கோல் அடித்தனர். இதற்கு மத்தியில் இந்திய வீரர் ராஜ்குமார் பால் 36-வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பை கோலாக்கினார்.
ஒரு கட்டத்தில் இந்தியா 1-4 என்ற கோல் கணக்கில் மோசமாக பின்தங்கி இருந்தது. கடைசி கட்டத்தில் ராஜ்குமார் பால் (47-வது நிமிடம்), ருபிந்தர்சிங் (52-வது நிமிடம்) ஆகிய இந்தியர்கள் கோல் போட்டு ஆறுதல் அளித்தனர். முடிவில் ஆஸ்திரேலியா 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இவ்விரு அணிகளும் இன்று மீண்டும் இதே மைதானத்தில் இரவு 7 மணிக்கு சந்திக்கின்றன. போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்3 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
9 அணிகள் இடையிலான புரோ லீக் ஆக்கி போட்டி பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் புவனேசுவரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்த ஆட்டத்தில் தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள இந்திய அணி, நடப்பு சாம்பியனும் 2-ம் நிலை அணியுமான ஆஸ்திரேலியாவுடன் மல்லுகட்டியது. இதில் இந்திய அணியின் தடுப்பு அரணை உடைத்தெறிந்த ஆஸ்திரேலியாவின் கை ஆரம்பத்திலேயே பலமாக ஓங்கியது. டைலன் வோதர்ஸ்பூன் (6-வது நிமிடம்), டாம் விக்ஹாம் (18-வது நிமிடம்), லாச்லன் ஷார்ப் (41-வது நிமிடம்), ஜாக்கப் ஆண்டர்சன் (42-வது நிமிடம்) ஆகிய ஆஸ்திரேலிய வீரர்கள் கோல் அடித்தனர். இதற்கு மத்தியில் இந்திய வீரர் ராஜ்குமார் பால் 36-வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பை கோலாக்கினார்.
ஒரு கட்டத்தில் இந்தியா 1-4 என்ற கோல் கணக்கில் மோசமாக பின்தங்கி இருந்தது. கடைசி கட்டத்தில் ராஜ்குமார் பால் (47-வது நிமிடம்), ருபிந்தர்சிங் (52-வது நிமிடம்) ஆகிய இந்தியர்கள் கோல் போட்டு ஆறுதல் அளித்தனர். முடிவில் ஆஸ்திரேலியா 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இவ்விரு அணிகளும் இன்று மீண்டும் இதே மைதானத்தில் இரவு 7 மணிக்கு சந்திக்கின்றன. போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்3 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X