search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிம் சவுத்தி
    X
    டிம் சவுத்தி

    இந்திய தொடக்க வீரர்களுக்கு அனுபவம் இல்லை... ஆனால் சிறந்த பேட்ஸ்மேன்கள் - டிம் சவுத்தி

    ரோகித் சர்மா காயம் காரணமாக விளையாடாத நிலையில் இந்தியா அனுபவம் இல்லாத வீரர்களுடன் களம் இறங்கினாலும், அவர்கள் சிறந்த பேட்ஸ்மேன்கள் என டிம் சவுத்தி தெரிவித்துள்ளார்.
    நியூசிலாந்து - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் நாளை தொடங்குகிறது. இந்திய அணியில் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மாவும், மயங்க் அகர்வாலும் விளையாடி வந்தனர். ரோகித் சர்மா காயம் காரணமாக விளையாடவில்லை.

    இதனால் மயங்க் அகர்வால் உடன் பிரித்வி ஷா தொடக்க வீரராக களம் இறங்குவார் என்று தெரிகிறது. மயங்க் அகர்வால் 9 டெஸ்ட் போட்டிகளிலும், பிரித்வி ஷா 2 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடியுள்ளனர்.

    நியூசிலாந்து ஆடுகளத்தில் டிம் சவுத்தி, டிரென்ட் போல்ட் ஆகியோரின் பந்து வீச்சை அனுபவம் இல்லாத இருவரும் தாக்குப்பிடித்து விளையாடுவார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    அவர்களிடம் அனுபவம் இல்லாவிடிலும், சிறந்த பேட்ஸ்மேன்கள் என்று நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுத்தி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து டிம் சவுத்தி கூறுகையில் ‘‘இந்திய அணி காயம் காரணமாக ஒன்றிரண்டு வீரர்களை இழந்துள்ளனர். ஆனால் திறமை வாய்ந்த வீரர்களை இந்தியா பெற்றுள்ளது. தேவைப்படும்போது அணியை முன்னெடுத்துச் செல்லும் திறன் அவர்களிடம் உள்ளது. ஹாமில்டனில் அவர்கள் சிறப்பாக விளையாடினர். அவர்ளுக்கு அனுபவம் இல்லாமல் இருக்கலாம். அதேநேரத்தில் அவர்கள் கிளாஸ் பிளேயர்ஸ்’’ என்றார்.
    Next Story
    ×