என் மலர்
செய்திகள்

மும்பை அணி வீரர்கள்
சவுராஷ்டிராவுக்கு எதிரான ஆட்டம் டிரா: நாக்அவுட் சுற்று வாய்ப்பை இழந்தது மும்பை
ராஜ்கோட்டில் நடைபெற்ற சவுராஷ்டிராவுக்கு எதிரான ஆட்டம் டிரா ஆனதால், மும்பை நாக்-அவுட் சுற்றுக்கான வாய்ப்பை இழந்தது.
ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் மும்பை அணி சவுராஷ்டிராவை எதிர்கொண்டது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே நாக்-அவுட் சுற்று வாய்ப்புக்கு முன்னேற முடியும் என்ற நிலையில் மும்பை அணி களம் இறங்கியது.
ராஜ்கோட்டில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங் தேர்வு செய்தது. சர்பராஸ் கான் (78), முலானி (78) அரைசதம் அடித்தாலும் மற்ற பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் மும்பை அணி முதல் இன்னிங்சில் 262 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய சவுராஷ்டிரா ஜாக்சன் (85), ஜானி (84 அவுட் இல்லை) ஆகியோரின் அரைசதங்களால் 335 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது.
பின்னர் 73 ரன்கள் பின்தங்கிய நிலையில் மும்பை 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்தது. சூர்யகுமார் யாதவ், முலானி (92 ஆகியோரின் அதிரடியால் 67 ஓவர்களில் 362 ரன்கள் குவித்து 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது மும்பை.
இதனால் சவுராஷ்டிரா அணிக்கு கடைசி நாளில் 290 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது. சீரான இடைவெளியில் சவுராஷ்டிரா விக்கெட்டுகளை இழந்து வந்தது. அந்த அணி 34 ஓவரில் 83 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுக்களை இழந்தது. இதனால் மும்பை அணி வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் 8-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மக்வானா, ஜடேஜா ஆகியோர் மும்பையின் பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொண்டு விக்கெட்டுக்களை காப்பாற்றினர். இந்த ஜோடியை பிரிக்க மும்பை பந்து வீச்சாளர்கள் எவ்வளவோ முயன்றனர். ஆனால் பலன் கிடைக்கவில்லை. சவுராஷ்டிரா 74 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்திருக்கும்போது கடைசி நாள் ஆட்டம் நிறைவுற்று போட்டி டிராவில் முடிந்தது.
மக்வானா 116 பந்தில் 31 ரன்களும், ஜடேஜா 125 பந்தில் 33 ரன்களும் சேர்த்து மும்பையின் வெற்றியை தடுத்ததோடு, நாக்-அவுட் சுற்றுக்கான கனவையும் தகர்த்தனர்.
எலைட் பிரிவில் மும்பை 7 போட்டிகளில் ஒரு வெற்றி, இரண்டு தோல்வி, நான்கு டிராவுடன் 14 புள்ளிகள் பெற்று 14-வது இடத்தை பிடித்துள்ளது.
ராஜ்கோட்டில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங் தேர்வு செய்தது. சர்பராஸ் கான் (78), முலானி (78) அரைசதம் அடித்தாலும் மற்ற பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் மும்பை அணி முதல் இன்னிங்சில் 262 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய சவுராஷ்டிரா ஜாக்சன் (85), ஜானி (84 அவுட் இல்லை) ஆகியோரின் அரைசதங்களால் 335 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது.
பின்னர் 73 ரன்கள் பின்தங்கிய நிலையில் மும்பை 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்தது. சூர்யகுமார் யாதவ், முலானி (92 ஆகியோரின் அதிரடியால் 67 ஓவர்களில் 362 ரன்கள் குவித்து 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது மும்பை.
இதனால் சவுராஷ்டிரா அணிக்கு கடைசி நாளில் 290 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது. சீரான இடைவெளியில் சவுராஷ்டிரா விக்கெட்டுகளை இழந்து வந்தது. அந்த அணி 34 ஓவரில் 83 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுக்களை இழந்தது. இதனால் மும்பை அணி வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் 8-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மக்வானா, ஜடேஜா ஆகியோர் மும்பையின் பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொண்டு விக்கெட்டுக்களை காப்பாற்றினர். இந்த ஜோடியை பிரிக்க மும்பை பந்து வீச்சாளர்கள் எவ்வளவோ முயன்றனர். ஆனால் பலன் கிடைக்கவில்லை. சவுராஷ்டிரா 74 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்திருக்கும்போது கடைசி நாள் ஆட்டம் நிறைவுற்று போட்டி டிராவில் முடிந்தது.
மக்வானா 116 பந்தில் 31 ரன்களும், ஜடேஜா 125 பந்தில் 33 ரன்களும் சேர்த்து மும்பையின் வெற்றியை தடுத்ததோடு, நாக்-அவுட் சுற்றுக்கான கனவையும் தகர்த்தனர்.
எலைட் பிரிவில் மும்பை 7 போட்டிகளில் ஒரு வெற்றி, இரண்டு தோல்வி, நான்கு டிராவுடன் 14 புள்ளிகள் பெற்று 14-வது இடத்தை பிடித்துள்ளது.
Next Story






