என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஸ் டெய்லர்
    X
    ராஸ் டெய்லர்

    நியூசிலாந்து ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு நெருக்கடியை கையாளும் திறமை அதிகம்: ராஸ் டெய்லர்

    ஹாமில்டனில் நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 348 ரன்னை எட்டிப்பிடித்த நியூசிலாந்து அணிக்கு நெருக்கடியை கையாளும் திறமை அதிகம் என டெய்லர் தெரிவித்துள்ளார்.
    நியூசிலாந்து - இந்தியா இடையில் நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை நியூசிலாந்து 0-5 என பறிகொடுத்தது. கடைசி மூன்று போட்டிகளில் வெற்றி பெறும் நிலையில், கடைசி கட்டத்தில் தோல்வியை சந்தித்தது. 3-வது மற்றும் 4-வது ஆட்டம் சமனில் முடிந்தது.

    இந்நிலையில் முதல் ஒருநாள் போட்டியில் 348 இலக்கை எட்டி வெற்றி பெற்றது. முதலில் நியூசிலாந்துக்கு சாதகமான வகையில் ஆட்டம் செல்லவில்லை. அதன்பின் ராஸ் டெய்லர் - டாம் லாதம் ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த நியூசிலாந்து பக்கம் ஆட்டம் வென்றது.

    டாம் லாதம் ஆட்டமிழந்த பிறகு ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் ராஸ் டெய்லர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் சிறப்பாக போட்டியை முடித்துக் கொடுத்தார். அவருக்கு துணையாக வந்த சான்ட்னெர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    இந்நிலையில் நியூசிலாந்து ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு நெருக்கடியை கையாளும் திறமை அதிகமாக உள்ளது என்று ராஸ் டெய்லர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ராஸ் டெய்லர் கூறுகையில் ‘‘டி20 தொடரில் ஒயிட்வாஷ் ஆன பிறகு இந்த வெற்றி கிடைத்துள்ளது சிறப்பானது. ஒருநாள் போட்டியில் நாங்கள் கடைசியாக உலக கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடினோம். நெருக்கடியான சூழ்நிலையில் விளையாடிய வீரர்கள் பலர் அதில் விளையாடியவர்கள். டி20 போட்டியை விட அவர்களுக்கு ஒருநாள் போட்டியில் அதிக அனுபவம் உள்ளது. அந்த அனுபவம் வெளிப்பட்டது’’ என்றார்.
    Next Story
    ×