என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
2வது டி20 கிரிக்கெட் - நியூசிலாந்தை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி
Byமாலை மலர்26 Jan 2020 10:30 AM GMT (Updated: 26 Jan 2020 11:24 AM GMT)
ஆக்லாந்தில் இன்று நடைபெற்ற 2வது டி20 கிரிக்கெட்டில் நியூசிலாந்தை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது.
ஆக்லாந்து:
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி அந்நாட்டு அணியுடன் 5 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள், 2 டெஸ்டில் விளையாடிவருகிறது.
இரு அணிகளும் மோதிய முதல் டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இந்நிலையில், இந்தியா-நியூசிலாந்து இடையேயான இரண்டாவது டி20 ஆக்லாந்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி, நியூசிலாந்து அணியின் தொடக்க விரர்களாக கப்தில், காலின் முன்ரோ களமிறங்கினர். ஆரம்பம் முதலே வீரர்கள் அதிரடியாக விளையாடியதால் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.
அணியின் ரன் 48 ஆக இருந்தபோது கப்தில் 26 ரன்னிலும், அவரை தொடர்ந்து முன்ரோ 33 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததையடுத்து நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்தது.
இந்திய அணி தரப்பில் ஜடேஜா அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையடுத்து 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, கேஎல் ராகுல் களமிறங்கினர். சர்மா 8 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த கேப்டன் கோலி 11 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் ஸ்ரேஷ் அய்யருடன் ஜோடி சேர்ந்த தொடக்க வீரர் கேஎல் ராகுல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஸ்ரேஷ் அய்யர் 44 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் 17.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இந்திய அணி 135 ரன்கள் எடுத்தது.
இதன் மூலம் நியூசிலாந்து அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. சிறப்பாக விளையாடி இறுதி வரை ஆட்டமிழக்காமல் இரண்டு சிக்சர்கள் உள்பட 57 ரன்கள் குவித்து வெற்றிக்கு வழிவகுத்த கேஎல் ராகுலுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. இரு அணிகளும் மோதும் 3-வது டி20 போட்டி வரும் புதன்கிழமை (ஜனவரி 29) நடைபெற உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X