search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரை சதமடித்த பாபர் அசாம்
    X
    அரை சதமடித்த பாபர் அசாம்

    2வது டி 20- வங்காளதேசத்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்

    லாகூரில் நடைபெற்ற முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் சோயிப் மாலிக் அரைசதம் அடிக்க பாகிஸ்தான் வங்காளதேசத்தை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
    லாகூர்:

    பாகிஸ்தான் - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி 20 போட்டி லாகூரில் நேற்று நடைபெற்றது.

    டாஸ் வென்ற வங்காளதேசம் பேட்டிங்கை தேர்வு செய்தது. தமிம் இக்பால் - முகமது நைம் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். 
     
    தமிம் இக்பால் மட்டும் பொறுப்புடன் ஆடி 65 ரன்கள் சேர்த்து அவுட்டானார். மற்ற வீரர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை. இதனால், வங்காளதேசம் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்களே எடுத்தது.

    அதன்பின், 137 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களம் இறங்கியது. அந்த அணியின் பாபர் அசாமும், முகமது ஹபீசும் அதிரடியாக ஆடி அரை சதம் அடித்தனர்.

    இதையடுத்து, பாகிஸ்தான் அணி 18.3 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 2-0 என டி20 தொடரை பாகிஸ்தான் கைப்பற்றியது. 
    Next Story
    ×