search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெற்றி பெற்ற மகிழ்ச்சியை கொண்டாடும் சென்னை அணி
    X
    வெற்றி பெற்ற மகிழ்ச்சியை கொண்டாடும் சென்னை அணி

    ஐஎஸ்எல் கால்பந்து - ஜாம்ஷெட்பூரை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது சென்னை

    சென்னையில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் ஜாம்ஷெட்பூர் அணியை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது சென்னை அணி.
    சென்னை:

    10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

    சென்னை ஜவகர்லால் நேரு மைதானத்தில் இன்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி, ஜாம்ஷெட்பூர் அணிகள் மோதின.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே சென்னை அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆட்டத்தின் 13வது நிமிடம் மற்றும் 43 வது நிமிடத்தில் சென்னை அணி வீரர்கள் கோல் அடித்தனர். இதனால் முதல் பாதி முடிவில் சென்னை 2-0 என முன்னிலை வகித்தது.

    தொடர்ந்து இரண்டாவது பாதியிலும் சென்னை வீரர்கள் அபாரமாக ஆடினர். 74 மற்றும் 87வது நிமிடத்தில் தலா ஒரு கோல் அடித்து அசத்தினர்.

    ஜாம்ஷெட்பூர் அணி 71வது நிமிடத்தில் ஒரு கோல் மட்டுமே அடித்தது. இறுதியில், சென்னை அணி 4-1 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூரை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி 18 புள்ளிகள் பெற்று ஆறாவது இடத்தை பிடித்துள்ளது. ஜாம்ஷெட்பூர் 16 புள்ளிகளுடன் 7வது இடத்திலும் உள்ளது.
    Next Story
    ×