என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிரித்வி ஷா 100 பந்தில் 150 ரன் விளாச இந்தியா ஏ அணி 372 ரன்கள் குவித்து வெற்றி
Byமாலை மலர்19 Jan 2020 10:05 AM GMT (Updated: 19 Jan 2020 10:05 AM GMT)
நியூசிலாந்து லெவன் அணிக்கெதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பிரித்வி ஷா 100 பந்தில் 150 ரன்கள் விளாசினார்.
இந்தியா ஏ - நியூசிலாந்து லெவன் அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா ஏ பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி மயங்க் அகர்வால், பிரித்வி ஷா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
பிரித்வி ஷா அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தார். அவர் 100 பந்தில் 150 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். மயங்க் அகர்வால் 32 ரன்களும், ஷுப்மான் கில் 24 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 26 ரன்களும் எடுத்தனர்.
விஜய் சங்கர் 58 ரன்களும், குருணால் பாண்டியா 33 ரன்களும் அடிக்க இந்தியா ஏ 49.2 ஓவரில் 372 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தனர்.
பின்னர் 373 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து லெவன் அணி களம் இறங்கியது. ஜேக் பாய்ல் சிறப்பாக விளையாடினார். அவர் 130 ரன்கள் விளாசினார். ஆலன் 65 பந்தில் 87 ரன்கள் அடித்தார்.
கேப்டன் மிட்செல், விக்கெட் கீப்பர் க்ளீவர் அதிரடியாக விளையாட நியூசிலாந்து ஏ வெற்றியை நோக்கி சென்றது. மிட்செல் 31 பந்தில் 41 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அதன்பின் நியூசிலாந்து ஏ அணியால் இலக்கை எட்ட இயலவில்லை. க்ளீவர் ஆட்டமிழக்காமல் 33 பந்தில் 44 ரன்கள் அடித்தாலும் நியூசிலாந்து ஏ அணியால் 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 360 ரன்களே சேர்த்து.
இதனால் இந்தியா ஏ 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஏற்கனேவே முதல் ஆட்டத்திலும் இந்தியா ஏ அணி வெற்றி பெற்றிருந்தது.
பிரித்வி ஷா அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தார். அவர் 100 பந்தில் 150 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். மயங்க் அகர்வால் 32 ரன்களும், ஷுப்மான் கில் 24 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 26 ரன்களும் எடுத்தனர்.
விஜய் சங்கர் 58 ரன்களும், குருணால் பாண்டியா 33 ரன்களும் அடிக்க இந்தியா ஏ 49.2 ஓவரில் 372 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தனர்.
பின்னர் 373 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து லெவன் அணி களம் இறங்கியது. ஜேக் பாய்ல் சிறப்பாக விளையாடினார். அவர் 130 ரன்கள் விளாசினார். ஆலன் 65 பந்தில் 87 ரன்கள் அடித்தார்.
கேப்டன் மிட்செல், விக்கெட் கீப்பர் க்ளீவர் அதிரடியாக விளையாட நியூசிலாந்து ஏ வெற்றியை நோக்கி சென்றது. மிட்செல் 31 பந்தில் 41 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அதன்பின் நியூசிலாந்து ஏ அணியால் இலக்கை எட்ட இயலவில்லை. க்ளீவர் ஆட்டமிழக்காமல் 33 பந்தில் 44 ரன்கள் அடித்தாலும் நியூசிலாந்து ஏ அணியால் 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 360 ரன்களே சேர்த்து.
இதனால் இந்தியா ஏ 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஏற்கனேவே முதல் ஆட்டத்திலும் இந்தியா ஏ அணி வெற்றி பெற்றிருந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X