என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இருந்து ரிஷப் பண்ட் விலகல்
Byமாலை மலர்15 Jan 2020 3:00 PM GMT (Updated: 15 Jan 2020 3:00 PM GMT)
மூளை அதிர்ச்சி காரணமாக ரிஷப் பண்ட் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.
இதில், முதல் ஒருநாள் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. 44-வது ஓவரை பேட் கம்மின்ஸ் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தை பவுன்சராக வீசினார். ரிஷப் பண்ட் அதை லெக் சைடு தூக்கி அடிக்க முயன்றார்.
பந்து பேட்டின் விளிம்பில் பட்டு ஹெல்மெட்டை பலமாக தாக்கியது. இதனால் ரிஷப் பண்ட் அதிர்ச்சிக்குள்ளானார். இந்திய அணி டாக்டர் அவரை பரிசோதித்ததில் மூளை அதிர்ச்சி அடைந்திருப்பதாக தெரியவந்தது.
இதனால் ரிஷப் பண்ட் பீல்டிங் செய்ய வரவில்லை. அவருக்குப் பதிலாக கேஎல் ராகுல் விக்கெட் கீப்பிங் பணியை செய்தார். டாக்டர்கள் அவரை கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், மூளை அதிர்ச்சி காரணமாக பாதிப்பு அடைந்துள்ள ரிஷப் பண்ட் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் விளையாட மாட்டார் என பிசிசிஐ இன்று தெரிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X