என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஓய்வு பெற தயார்... இந்தியாவிடம் படுதோல்வி அடைந்ததால் மலிங்கா விரக்தி
Byமாலை மலர்12 Jan 2020 2:04 PM GMT (Updated: 12 Jan 2020 2:04 PM GMT)
இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் எந்தவிதத்திலும் போட்டியிட முடியாமல் போன விரக்தியில் கேப்டன் பதவியில் இருந்து விலக தயார் என மலிங்கா தெரிவித்துள்ளார்.
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டது. 2-வது போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 3-வது போட்டியில் 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இரண்டு போட்டிகளிலும் அவருடன் பந்து வீச்சாளர்கள் எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. இந்திய அணியை சேஸிங் செய்ய விடாமல் தடுக்கவும் முடியவில்லை. இந்திய அணியை குறைந்த ரன்னுக்குள் கட்டுப்படுத்தவும் முடியவில்லை.
இதனால் விரக்தியடைந்த மலிங்கா எப்போது வேண்டுமென்றாலும் ஓய்வு பெற தயார் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘எந்த நேரத்திலும் நான் தயார். பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறேன்’’ என்றார்.
இதற்கிடையே முன்னாள் கேப்டன்களான திசாரா பெரேரா, மேத்யூஸ் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு மலிங்கா மீது சுமத்தப்பட்டுள்ளது.
2014-ம் ஆண்டு இவரது தலைமையில் இலங்கை அணி டி20 உலகக்கோப்பையை கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டு போட்டிகளிலும் அவருடன் பந்து வீச்சாளர்கள் எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. இந்திய அணியை சேஸிங் செய்ய விடாமல் தடுக்கவும் முடியவில்லை. இந்திய அணியை குறைந்த ரன்னுக்குள் கட்டுப்படுத்தவும் முடியவில்லை.
இதனால் விரக்தியடைந்த மலிங்கா எப்போது வேண்டுமென்றாலும் ஓய்வு பெற தயார் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘எந்த நேரத்திலும் நான் தயார். பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறேன்’’ என்றார்.
இதற்கிடையே முன்னாள் கேப்டன்களான திசாரா பெரேரா, மேத்யூஸ் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு மலிங்கா மீது சுமத்தப்பட்டுள்ளது.
2014-ம் ஆண்டு இவரது தலைமையில் இலங்கை அணி டி20 உலகக்கோப்பையை கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X