என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சுழற்பந்து வீச்சாளர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள்: பேட் கம்மின்ஸ்
Byமாலை மலர்10 Jan 2020 8:39 AM GMT (Updated: 10 Jan 2020 8:39 AM GMT)
உலகின் நம்பர் ஒன் வேகப்பந்து வீச்சாளரான பேட் கம்மின்ஸ், இந்திய தொடரில் சுழற்பந்து வீச்சாளர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.
மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா இந்தியா வந்துள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டி 14-ந்தேதி நடக்கிறது.
உலகின் நம்பர் ஒன் வேகப்பந்து வீச்சாளரான பேட் கம்மின்ஸ் அணியில் உள்ளார். இருந்தாலும் இந்திய ஆடுகளத்திற்கு ஏற்ப இரண்டு முதன்மை சுழற்பந்து வீச்சாளர்களை அணியில் சேர்த்துள்ளது.
இந்நிலையில் இந்திய தொடரில் சுழற்பந்து வீச்சாளர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்று பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேட் கம்மின்ஸ் கூறுகையில் ‘‘உலகில் மற்ற இடங்களில் விளையாடுவதை விட சுழற்பந்து வீச்சாளர்கள் இந்தியாவில் ஆட்டத்தின் மிகப்பெரிய பகுதியாக இருப்பார்கள். ஆனால், ஒருநாள் சர்வதேச போட்டியில் மிகப்பெரிய அளவில் பந்து திரும்பும் அளவிற்கு ஆடுகளம் மாறுவது அரிதானது.
கடந்த தொடரின்போது நாங்கள் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாடியதாக கருதுகிறேன். இந்தியாவும் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாடியது. மிடில் ஓவர்கள் அவர்கள் பந்து வீசுவது முக்கியமானது’’ என்றார்.
ஆஸ்திரேலியா ஆஷ்டோன் அகர் மற்றும் ஆடம் ஜம்பா ஆகிய இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் வந்துள்ளது.
உலகின் நம்பர் ஒன் வேகப்பந்து வீச்சாளரான பேட் கம்மின்ஸ் அணியில் உள்ளார். இருந்தாலும் இந்திய ஆடுகளத்திற்கு ஏற்ப இரண்டு முதன்மை சுழற்பந்து வீச்சாளர்களை அணியில் சேர்த்துள்ளது.
இந்நிலையில் இந்திய தொடரில் சுழற்பந்து வீச்சாளர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்று பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேட் கம்மின்ஸ் கூறுகையில் ‘‘உலகில் மற்ற இடங்களில் விளையாடுவதை விட சுழற்பந்து வீச்சாளர்கள் இந்தியாவில் ஆட்டத்தின் மிகப்பெரிய பகுதியாக இருப்பார்கள். ஆனால், ஒருநாள் சர்வதேச போட்டியில் மிகப்பெரிய அளவில் பந்து திரும்பும் அளவிற்கு ஆடுகளம் மாறுவது அரிதானது.
கடந்த தொடரின்போது நாங்கள் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாடியதாக கருதுகிறேன். இந்தியாவும் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாடியது. மிடில் ஓவர்கள் அவர்கள் பந்து வீசுவது முக்கியமானது’’ என்றார்.
ஆஸ்திரேலியா ஆஷ்டோன் அகர் மற்றும் ஆடம் ஜம்பா ஆகிய இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் வந்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X