என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சோர்ந்திருக்கும் மும்பை அணி வீரர்களை உத்வேகப்படுத்திய ஹிட்மேன்
Byமாலை மலர்8 Jan 2020 8:28 AM GMT (Updated: 8 Jan 2020 8:28 AM GMT)
ரஞ்சி கோப்பை தொடரில் மும்பை கிரிக்கெட் அணி படுதோல்விகளை சந்தித்துள்ள நிலையில், ரோகித் சர்மா உத்வேகம் அளிக்கும் வகையில் வீரர்களிடையே பேசினார்.
இந்தியாவின் உள்ளூர் முதல்தர கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் நடைபெற்று வருகிறது. 40-க்கும் அதிகமான முறை சாம்பியன் பட்டத்தை வென்ற மும்பை அணி தற்போது திணறி வருகிறது.
முதல் ஆட்டத்தில் பரோடாவை வீழ்த்தியது. ஆனால், 2-வது ஆட்டத்தில் சர்வீசஸ் அணிக்கெதிராக படுதோல்வியடைந்தது. அத்துடன் மட்டுமல்லாமல் கர்நாடகா அணிக்கெதிராகவும் தோல்வியை சந்தித்தது.
இதனால் மும்பை அணி வீரர்கள் சோர்ந்து காணப்பட்டனர். இந்நிலையில் அவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், அவர்களுக்கு மத்தியில் பேசும்படி ரோகித் சர்மாவை அணி நிர்வாகம் கேட்டுக்கொண்டது.
அதன்படி ரோகித் சர்மா நேற்று வீரர்கள் வலைப்பயிற்சி மேற்கொண்டிருந்த போது வான்கடே மைதானத்திற்கு சென்று அவர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் பேசினார்.
2006-07 சீசனில் மும்பை அணி முதல் மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் ஒரு புள்ளிகள் கூட பெறவில்லை. அதன்பின் அபாரமாக விளையாடி கோப்பையை கைப்பற்றியது என்பதை நினைவு கூர்ந்து சுமார் 15 நிமிடங்கள் பேசினார்.
ரோகித் சர்மாவின் பேச்சால் வீரர்கள் உத்வேகம் அடைந்திருப்பார்கள் என்று அணி நிர்வாகம் நம்புகிறது.
முதல் ஆட்டத்தில் பரோடாவை வீழ்த்தியது. ஆனால், 2-வது ஆட்டத்தில் சர்வீசஸ் அணிக்கெதிராக படுதோல்வியடைந்தது. அத்துடன் மட்டுமல்லாமல் கர்நாடகா அணிக்கெதிராகவும் தோல்வியை சந்தித்தது.
இதனால் மும்பை அணி வீரர்கள் சோர்ந்து காணப்பட்டனர். இந்நிலையில் அவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், அவர்களுக்கு மத்தியில் பேசும்படி ரோகித் சர்மாவை அணி நிர்வாகம் கேட்டுக்கொண்டது.
அதன்படி ரோகித் சர்மா நேற்று வீரர்கள் வலைப்பயிற்சி மேற்கொண்டிருந்த போது வான்கடே மைதானத்திற்கு சென்று அவர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் பேசினார்.
2006-07 சீசனில் மும்பை அணி முதல் மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் ஒரு புள்ளிகள் கூட பெறவில்லை. அதன்பின் அபாரமாக விளையாடி கோப்பையை கைப்பற்றியது என்பதை நினைவு கூர்ந்து சுமார் 15 நிமிடங்கள் பேசினார்.
ரோகித் சர்மாவின் பேச்சால் வீரர்கள் உத்வேகம் அடைந்திருப்பார்கள் என்று அணி நிர்வாகம் நம்புகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X