என் மலர்
செய்திகள்

ரஞ்சி டிராபி கிரிக்கெட்
மும்பையை துவம்சம் செய்த சர்வீசஸ் அணி மகாராஷ்டிராவை 44 ரன்னில் சுருட்டியது
ரஞ்சி டிராபியில் மும்பை அணிக்கு ஷாக் கொடுத்த சர்வீசஸ், மகாராஷ்டிரா அணியை 44 ரன்களில் சுருட்டியது.
ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடரில் இன்று எராளமான ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. டெல்லியில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் மகாராஷ்டிரா - சர்வீசஸ் அணிகள் விளையாடுகின்றன.
மகாராஷ்டிரா டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணிக்கு தொடக்க முதலே அதிர்ச்சி காததிருந்தது. முதல் ஐந்து பேட்ஸ்மேன்கள் ஒற்றையிலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர். இதனால் 18 ரன்னுக்குள் ஐந்து விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தது.
அதன்பின் வந்த சத்யஜீத் பச்சாவ் 11 ரன்களும், சிராக் குராணா 14 ரன்களும் சேர்த்தனர். அதன்பின் கடைநிலை வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க 30.2 ஓவர்களே தாக்குப்பிடித்த மகாராஷ்டிரா 44 ரன்னில் சுருண்டது. அந்த அணியின் நான்கு பேட்ஸ்மேன்கள் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார்கள்.
சர்வீசஸ் அணி சார்பில் பூனம் பூனியா 10.2 ஓவர்கள் வீசி 11 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஐந்து விக்கெட்டுகள் சாய்த்தார். சச்சிதானந்த் பாண்டே 3 விக்கெட்டும், திவேஷ் பதானியா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
முந்தைய போட்டியில் மும்பை அணியை இரண்டு இன்னிங்சிலும் குறைந்த ரன்னில் சுருட்டி 10 விக்கெட் வித்தியாசத்தில் சர்வீசஸ் அணி அபார வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தத்கது.
மகாராஷ்டிரா டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணிக்கு தொடக்க முதலே அதிர்ச்சி காததிருந்தது. முதல் ஐந்து பேட்ஸ்மேன்கள் ஒற்றையிலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர். இதனால் 18 ரன்னுக்குள் ஐந்து விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தது.
அதன்பின் வந்த சத்யஜீத் பச்சாவ் 11 ரன்களும், சிராக் குராணா 14 ரன்களும் சேர்த்தனர். அதன்பின் கடைநிலை வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க 30.2 ஓவர்களே தாக்குப்பிடித்த மகாராஷ்டிரா 44 ரன்னில் சுருண்டது. அந்த அணியின் நான்கு பேட்ஸ்மேன்கள் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார்கள்.
சர்வீசஸ் அணி சார்பில் பூனம் பூனியா 10.2 ஓவர்கள் வீசி 11 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஐந்து விக்கெட்டுகள் சாய்த்தார். சச்சிதானந்த் பாண்டே 3 விக்கெட்டும், திவேஷ் பதானியா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
முந்தைய போட்டியில் மும்பை அணியை இரண்டு இன்னிங்சிலும் குறைந்த ரன்னில் சுருட்டி 10 விக்கெட் வித்தியாசத்தில் சர்வீசஸ் அணி அபார வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தத்கது.
Next Story






