என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டிம் பெய்னுக்கு எதிராக ஒரு காரணத்தை கூட பார்க்க முடியவில்லை: ஜஸ்டின் லாங்கர்
Byமாலை மலர்1 Jan 2020 12:24 PM GMT (Updated: 1 Jan 2020 12:24 PM GMT)
ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டனாக டிம் பெய்ன் தொடர முடியாது என்பதற்கான ஒரு காரணத்தைக் கூட என்னால் பார்க்க முடியவில்லை என லாங்கர் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் இருந்தார். தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்ற கேப் டவுன் டெஸ்டின்போது பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்மித் சிக்கினார்.
அவருக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஓராண்டு தடைவிதித்தது. மேலும், கூடுதலாக ஒரு வருடம் கேப்டன் பதவிக்கு தடைவிதித்திருந்தது.
அந்த காலக்கட்டத்தில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் டிம் பெய்ன் கேப்டனாக பதவி ஏற்றுக் கொண்டார். தொடக்கத்தில் ஆஸ்திரேலியா திணறினாலும் கடந்த வருடம் நடைபெற்ற ஆஷஸ் தொடரில் சிறப்பாக விளையாடி 2-2 என தொடரை டிரா செய்து கோப்பையை தக்கவைத்தது.
சொந்த மண்ணில் பாகிஸ்தானை தொடரை 2-0 எனக் கைப்பற்றியது. நியூசிலாந்துக்கு எதிரான தொடரையும் 2-0 என கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது.
ஆஷஸ் தொடரின்போது ஸ்மித் மீண்டும் டெஸ்ட் போட்டிக்கு திரும்பினார். ஆஷஸ் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், அவரை மீண்டும் கேப்டனாக நியமிக்க ஆதரவு பெருகி வருகிறது.
இந்நிலையில் டிம் பெய்னின் கேப்டன் பதவிக்கு எதிரான ஒரு காரணத்தை கூட என்னால் பார்க்க முடியவில்லை என்று அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜஸ்டின் லாங்கர் கூறுகையில் ‘‘உண்மையிலேயே டிம் பெய்னுக்கு எதிராக ஒரு காரணத்தை கூட என்னால் பார்க்க முடியவில்லை. மெல்போர்ன் டெஸ்டில் சிறப்பாக விளையாடி 70 ரன்களுக்கு மேல் சேர்த்தார். அத்துடன் 8 கேட்ச்களை பிடித்தார். அவர் உடற்தகுயுடன் இருப்பதால், விரும்பும் வரை ஏன் விளையாட முடியாது’’ என்றார்.
அவருக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஓராண்டு தடைவிதித்தது. மேலும், கூடுதலாக ஒரு வருடம் கேப்டன் பதவிக்கு தடைவிதித்திருந்தது.
அந்த காலக்கட்டத்தில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் டிம் பெய்ன் கேப்டனாக பதவி ஏற்றுக் கொண்டார். தொடக்கத்தில் ஆஸ்திரேலியா திணறினாலும் கடந்த வருடம் நடைபெற்ற ஆஷஸ் தொடரில் சிறப்பாக விளையாடி 2-2 என தொடரை டிரா செய்து கோப்பையை தக்கவைத்தது.
சொந்த மண்ணில் பாகிஸ்தானை தொடரை 2-0 எனக் கைப்பற்றியது. நியூசிலாந்துக்கு எதிரான தொடரையும் 2-0 என கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது.
ஆஷஸ் தொடரின்போது ஸ்மித் மீண்டும் டெஸ்ட் போட்டிக்கு திரும்பினார். ஆஷஸ் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், அவரை மீண்டும் கேப்டனாக நியமிக்க ஆதரவு பெருகி வருகிறது.
இந்நிலையில் டிம் பெய்னின் கேப்டன் பதவிக்கு எதிரான ஒரு காரணத்தை கூட என்னால் பார்க்க முடியவில்லை என்று அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜஸ்டின் லாங்கர் கூறுகையில் ‘‘உண்மையிலேயே டிம் பெய்னுக்கு எதிராக ஒரு காரணத்தை கூட என்னால் பார்க்க முடியவில்லை. மெல்போர்ன் டெஸ்டில் சிறப்பாக விளையாடி 70 ரன்களுக்கு மேல் சேர்த்தார். அத்துடன் 8 கேட்ச்களை பிடித்தார். அவர் உடற்தகுயுடன் இருப்பதால், விரும்பும் வரை ஏன் விளையாட முடியாது’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X