என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஐபிஎல் 2020 சீசன் மார்ச் மாதம் 29-ந்தேதி தொடங்குகிறது
Byமாலை மலர்31 Dec 2019 11:49 AM GMT (Updated: 31 Dec 2019 11:49 AM GMT)
மும்பை வான்கடே மைதானத்தில் மார்ச் 29-ந்தேதி ஐபிஎல் 2020 சீசன் தொடங்கும் என முக்கிய நபர் மூலம் செய்தி வெளியாகியுள்ளது.
உலகளவில் மிகவும் பிரபலமான டி20 லீக்காக ஐபிஎல் திகழ்கிறது. இந்த 10 ஆண்டுகளின் கடைசி தொடரான 2019-ல் மும்பை இந்தியன்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது.
அடுத்த சீசன் (2020) மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை நடக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மார்ச் 29-ந்தேதி தொடர் தொடங்கும் எனவும், முதல் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கும் எனவும், இதில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் மற்றொரு அணியுடன் விளையாடும் எனவும் முக்கிய நபர் மூலம் தகவல் வெளியாகியுள்ளது.
ஒருவேளை அந்த நபர் கூறியதுபோல் மார்ச் 29-ந்தேதி தொடங்கினால் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளுக்காக விளையாடும் வீரர்கள் தொடக்கத்தில் சில போட்டிகளை தவறவிட வாய்ப்புள்ளது.
ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடரின் கடைசி போட்டி மார்ச் 29-ந்தேதி முடிவடைகிறது. இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் மார்ச் 31-ந்தேதிதான் முடிவடைகிறது.
முன்னதாக ஐபிஎல் அணியைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் ஏப்ரல் 1-ந்தேதி தொடரை தொடங்கினால் நன்றாக இருக்கும் என கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அடுத்த சீசன் (2020) மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை நடக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மார்ச் 29-ந்தேதி தொடர் தொடங்கும் எனவும், முதல் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கும் எனவும், இதில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் மற்றொரு அணியுடன் விளையாடும் எனவும் முக்கிய நபர் மூலம் தகவல் வெளியாகியுள்ளது.
ஒருவேளை அந்த நபர் கூறியதுபோல் மார்ச் 29-ந்தேதி தொடங்கினால் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளுக்காக விளையாடும் வீரர்கள் தொடக்கத்தில் சில போட்டிகளை தவறவிட வாய்ப்புள்ளது.
ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடரின் கடைசி போட்டி மார்ச் 29-ந்தேதி முடிவடைகிறது. இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் மார்ச் 31-ந்தேதிதான் முடிவடைகிறது.
முன்னதாக ஐபிஎல் அணியைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் ஏப்ரல் 1-ந்தேதி தொடரை தொடங்கினால் நன்றாக இருக்கும் என கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X