என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மெக்கில்லுக்காக அவர் என்றாவது ஓய்வு எடுத்தாரா?: வார்னே மீது நாதன் லயன் பாய்ச்சல்
Byமாலை மலர்30 Dec 2019 1:15 PM GMT (Updated: 30 Dec 2019 1:15 PM GMT)
நியூசிலாந்துக்கு எதிரான தொடரை 2-0 என ஆஸ்திரேலியா கைப்பற்றியதால் சிட்னி போட்டியில் நாதன் லயனுக்கு ஓய்வு அளிக்க வேண்டும் என வார்னே தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்டிலும், மெல்போர்னில் நடைபெற்ற 2-வது டெஸ்டிலும் ஆஸ்திரேலியா அபாரமான வெற்றியை பெற்றது.
இரண்டு வெற்றிகள் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 எனக் கைப்பற்றியுள்ளது. இதனால் சிட்னியில் நடைபெற்ற 3-வது டெஸ்ட் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படாது. வெற்றி அல்லது தோல்வி அந்த அணியை பெரிய அளவில் பாதிக்காது.
சிட்னி ஆடுகளம் ஏற்கனவே சுழற்பந்து வீச்சுக்கு கைக்கொடுக்கும் என்பதால் ஆஸ்திரேலியா அணியில் கூடுதலாக சுழற்பந்து வீச்சாளரான ஸ்வெப்சன் சேர்க்கப்பட்டுள்ளார். ஏற்கனவே நாதன் லயன் அந்த அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக உள்ளார்.
இதனால் ஸ்வெப்சனுக்கு இடம் கிடைக்குமா என்பது சந்தேகம்தான். இந்நிலையில்தான் ஸ்வெப்சனுக்க வாய்ப்பு கிடைக்கும் வகையில் நாதன் லயன் ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும் என ஷேன் வார்னே தெரிவித்திருந்தார்.
ஷேன் வார்னே விளையாடிய காலத்தில், சமகால சுழற்பந்து வீச்சாளரான மெக்கில்லுக்காக வார்னே என்றாவது ஓய்வு எடுத்துக் கொண்டாரா? என நாதன் லயன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து நாதன் லயன் கூறுகையில் ‘‘மெக்கில் விளையாடுவதற்காக வார்னே என்றாவது ஓய்வு எடுத்ததுண்டா?. என்னால் ஒய்வில் இருக்க முடியாது. சிட்னி டெஸ்டில் இரண்டு ஸ்பின்னர்களுடன் விளையாடுவது குறித்து பேசப்பட்டு வருகிறது.’’ என்றார்.
இரண்டு வெற்றிகள் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 எனக் கைப்பற்றியுள்ளது. இதனால் சிட்னியில் நடைபெற்ற 3-வது டெஸ்ட் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படாது. வெற்றி அல்லது தோல்வி அந்த அணியை பெரிய அளவில் பாதிக்காது.
சிட்னி ஆடுகளம் ஏற்கனவே சுழற்பந்து வீச்சுக்கு கைக்கொடுக்கும் என்பதால் ஆஸ்திரேலியா அணியில் கூடுதலாக சுழற்பந்து வீச்சாளரான ஸ்வெப்சன் சேர்க்கப்பட்டுள்ளார். ஏற்கனவே நாதன் லயன் அந்த அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக உள்ளார்.
இதனால் ஸ்வெப்சனுக்கு இடம் கிடைக்குமா என்பது சந்தேகம்தான். இந்நிலையில்தான் ஸ்வெப்சனுக்க வாய்ப்பு கிடைக்கும் வகையில் நாதன் லயன் ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும் என ஷேன் வார்னே தெரிவித்திருந்தார்.
ஷேன் வார்னே விளையாடிய காலத்தில், சமகால சுழற்பந்து வீச்சாளரான மெக்கில்லுக்காக வார்னே என்றாவது ஓய்வு எடுத்துக் கொண்டாரா? என நாதன் லயன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து நாதன் லயன் கூறுகையில் ‘‘மெக்கில் விளையாடுவதற்காக வார்னே என்றாவது ஓய்வு எடுத்ததுண்டா?. என்னால் ஒய்வில் இருக்க முடியாது. சிட்னி டெஸ்டில் இரண்டு ஸ்பின்னர்களுடன் விளையாடுவது குறித்து பேசப்பட்டு வருகிறது.’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X