என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உலக டூர் பேட்மிண்டன்: வெற்றியோடு முதல் சுற்றில் இருந்து வெளியேறினார் பிவி சிந்து
Byமாலை மலர்13 Dec 2019 1:54 PM GMT (Updated: 13 Dec 2019 1:54 PM GMT)
உலக டூர் பேட்மிண்டன் தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியாவின் பிவி சிந்து சீன வீராங்கனையை வீழ்த்தினார்.
டாப்-8 வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்றுள்ள உலக டூர் இறுதி சுற்று பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவின் குவாங்ஜோவ் நகரில் நடைபெற்று வருகிறது.
‘ஏ’ பிரிவில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான பிவி சிந்து இடம் பிடித்திருந்தார். நடப்பு சாம்பியனான பிவி சிந்து இந்த முறையும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் முதல் இரண்டு போட்டிகளிலும் அடுத்தடுத்து தோல்வியடைந்து நாக்-அவுட் சுற்றுக்கான வாய்ப்பை இழந்தார்.
இந்நிலையில் இன்று கடைசி போட்டியில் சீனாவைச் சேர்ந்த ஹி பிங்ஜியாவோவை எதிர்கொண்டார். இதில் பிவி சிந்து 21-19, 21-19 என வெற்றி பெற்றார்.
முதல் செட்டில் சீன வீராங்கனை 11-6 என முன்னிலையில் இருந்தார். அதன்பின் 18-9 என முன்னிலைப் பெற்றார். பின்னர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிவி சிந்து தொடர்ச்சியாக 9 புள்ளிகள் பெற்று 18-18 என சமநிலைப் பெற்றார். அதன்பின் 21-19 என முதல் செட்டை கைப்பற்றினார்.
2-வது செட்டில் பிவி சிந்து 7-3 எனவும், 11-6 எனவும் முன்னிலைப் பெற்றார். பின்னர் சீன வீராங்கனை 16-18 என நெருங்கி வந்தார். அதன்பின் பிவி சிந்து தொடர்ச்சியாக மூன்று புள்ளிகள் பெற்று 21-19 என 2-வது செட்டை கைப்பற்றி வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் பிவி சிந்து ‘ஏ’ பிரிவில் 3-வது இடம் பிடித்து வெளியேறினார்.
‘ஏ’ பிரிவில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான பிவி சிந்து இடம் பிடித்திருந்தார். நடப்பு சாம்பியனான பிவி சிந்து இந்த முறையும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் முதல் இரண்டு போட்டிகளிலும் அடுத்தடுத்து தோல்வியடைந்து நாக்-அவுட் சுற்றுக்கான வாய்ப்பை இழந்தார்.
இந்நிலையில் இன்று கடைசி போட்டியில் சீனாவைச் சேர்ந்த ஹி பிங்ஜியாவோவை எதிர்கொண்டார். இதில் பிவி சிந்து 21-19, 21-19 என வெற்றி பெற்றார்.
முதல் செட்டில் சீன வீராங்கனை 11-6 என முன்னிலையில் இருந்தார். அதன்பின் 18-9 என முன்னிலைப் பெற்றார். பின்னர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிவி சிந்து தொடர்ச்சியாக 9 புள்ளிகள் பெற்று 18-18 என சமநிலைப் பெற்றார். அதன்பின் 21-19 என முதல் செட்டை கைப்பற்றினார்.
2-வது செட்டில் பிவி சிந்து 7-3 எனவும், 11-6 எனவும் முன்னிலைப் பெற்றார். பின்னர் சீன வீராங்கனை 16-18 என நெருங்கி வந்தார். அதன்பின் பிவி சிந்து தொடர்ச்சியாக மூன்று புள்ளிகள் பெற்று 21-19 என 2-வது செட்டை கைப்பற்றி வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் பிவி சிந்து ‘ஏ’ பிரிவில் 3-வது இடம் பிடித்து வெளியேறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X